வாஷிங்டன்: அமெரிக்காவின் கரேபியன் தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகானத்திற்கு உட்பட்ட கரேபியன் தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் 7.8 -ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.


அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, இந்திய நேரப்படி இன்று விடியற்காலை சுமார் 5.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது, ஜமைக்கா பகுதியில் சுமார் 10கிமி பரப்பளவிற்கு இந்த நிலநடுக்கமானது உனரப்பட்டுள்ளது.


இந்நிலையில் இப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரேபியன் தீவின் பகுதி மற்றும் மத்திய அமெரிக்க பகுதியான மெக்ஸிகோ பகுதிகளிலும் சுனாமி ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


எனினும் இந்த நிலநடுக்கத்தில் எந்த வித உயிர்சேதமும் ஏற்படவில்லை என உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.