லண்டன் நகரில் உள்ள கேம்டன் லாக் மார்க்கெட் கட்டத்தில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது அதிவேகமாக பரவி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீ விபத்து ஏற்பட்டதும் அங்கு தீயணைப்பு படைகள் விரைந்தனர். மேலும் தீயை அணைக்கும் முயற்சியில் 70-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 


மார்க்கெட்டில் உள்ள மூன்று மாடிகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உயிரிழப்பு குறித்து இதுவரை தகவல் எதுவும் இல்லை.


நீண்ட நேரம் இந்த தீ கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதால் கட்டடம் வெடித்துவிடும் என்றுமக்கள் அச்சத்தில் உள்ளதாக அப்பகுதிவாசி ஒருவர் தெரிவித்தார்.


கேம்டன் லாக் மார்க்கெட் பகுதி அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.