ரஷ்யா உக்ரைன் போர்: கடந்த சில மாதங்களாக ஒப்பீட்டளவில் பெரிய அளவில் தாக்குதம் ஏதும் இல்லாத நிலையில், திங்களன்று உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட அதன் பல நகரங்களில் ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்தன. இதற்கிடையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது டெலிகிராம் கணக்கில், "ரஷ்யா எங்களை முழுவது அழிக்க முயற்சிக்கிறது" என்றும் உக்ரைனியர்கள் உறுதியாக நிற்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உக்ரைனின் உள்துறை அமைச்சக ஆலோசகர் ரோஸ்டிஸ்லாவ் ஸ்மிர்னோவ் இது குறித்து கூறுகையில், கியேவில் நடந்த தாக்குதலில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 24 பேர் காயமடைந்தனர் என்றார். அதே நேரத்தில், கியேவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ இது குறித்து கூறுகையில், நகரின் மையத்தில் உள்ள ஷெவ்செங்கோவில் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். இப்பகுதியில் ஏராளமான அரசு அலுவலகங்கள் உள்ளன. முன்னதாக, ஜூன் மாதம் கியேவில் தாக்குதல் நடத்தப்பட்டது. முந்தைய தாக்குதல்கள் கெய்வின் புறநகர்ப் பகுதியை குறிவைத்தன, ஆனால் இந்த முறை நகரின் மையத்தில் பல தளங்கள் குறிவைக்கப்பட்டன.


உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் Lesia Vasilenko மத்திய கியேவில் உள்ள Kyiv தேசிய பல்கலைக்கழகத்தின் பிரதான கட்டிடத்திற்கு அருகே தாக்குதல் நடத்தப்பட்ட புகைப்படத்தை ட்வீட் செய்துள்ளார். கிய்வில் உள்ள அவசர சேவை செய்தித் தொடர்பாளர் ஸ்விட்லானா வோடோலாகா, உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், மீட்புப் பணியாளர்கள் பல்வேறு இடங்களில் பணியாற்றி வருவதாகவும் கூறினார்.


மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் போர்: ரஷ்யா - கிரிமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தின் ஒரு பகுதி தகர்ந்தது!


கார்கிவ் மேயர் இஹோர் தெரெகோவ் கூறுகையில், கார்கிவ் மூன்று முறை தாக்கப்பட்டதால் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் தடைபட்டது. உக்ரேனிய ஊடகங்களும் எல்விவ், டெர்னோபில், க்மெல்னிட்ஸ்கி, சைட்டோமிர் மற்றும் க்ரோபிவ்னிட்ஸ்கி போன்ற பல இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்பட்டதால செய்தி வெளியிட்டுள்ளன.சமீபத்தில், கிரிமியாவின் வடக்கில் சப்போரிஷியா உள்ளிட்ட பகுதிகள் குறிவைக்கப்பட்டன. சப்போரிஷியா மீது ரஷ்யா ஆறு ஏவுகணைகளை சனிக்கிழமை வீசியது.


இந்நிலையில், பாலத்தின் மீதான தாக்குதலை ‘பயங்கரவாத செயல்’ என்று புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க இருந்து சில மணி நேரங்களுக்கு முன்பு ரஷ்யாவை கிரிமியாவுடன் இணைக்கும் பாலம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவை கிரிமியாவுடன் இணைக்கும் பாலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை உக்ரைன் சிறப்புப் படையினர் "பயங்கரவாதச் செயல்" என்று புடின் அழைத்தார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கி எட்டு மாதங்கள் நிறைவடைய உள்ளது. 


மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் போர்; தொடரும் ரஷ்ய தொழிலதிபர்களின் மர்ம மரணங்கள்!


மேலும் படிக்க | Viral News: தன்னை கடித்த பாம்பை கடித்து குதறிய 2 வயது சிறுமி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ