நியூ மெக்ஸிக்கோ: துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் ஒருவர், நியூ மெக்ஸிகோ உயர்நிலை பள்ளி ஒன்றின் இரண்டு மாணவர்கள் சுட்டுக் கொன்றுவிட்டு பின்னர் தானும் சுட்டுக்கொன்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சான் ஜுவான் கவுண்டி ஷெரிப் என்பது அவரது பெயராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது எனினும் அதிகார பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. 


இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஆஜ்டெக் உயர்நிலை பள்ளி மாணவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.


கிறிஸ்டென்சன் மற்றும் நியூ மெக்ஸிகோ மாநில காவல்துறை தலைவர் பீட் கஸெட்டஸ் ஆகியோர் இச்சம்பவம் குறித்து கூறுகையில், கொலையாளி தன்னைத் தானே சுட்டுக்கொண்டாரா, இல்லை ஆஜ்டெக் காவல்துறை அதிகாரி அவரை சுட்டுக் கொன்றாரா?  எனும் சந்தேகம் நிலவி வருகின்றது, விசாரணைக்கு பிறகே முழுமையான தகவல்கள் கிடைக்கும் என தெரிவித்துள்ளானர்.


சாண்டோ பேவின் வடமேற்கில் சுமார் 20 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள நவாஜோ நேஷன் பகுதியில் உள்ள ஆஜ்டெக் பள்ளியில் காலை சுமார் 8 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.