அமெரிக்கா லாஸ் வேகாஸ் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட ஸ்டீவன் எதற்காக இப்படி செய்தார் என்று கண்டறிய முடியாமல் எப்.பி.ஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் திணறுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்கா, லாஸ் வேகாஸ் நகரில் கேசினோ ஓட்டல் ஒன்றில் கடந்த ஞாயிறு இரவு நடைப்பெற்ற கச்சேரி கூட்டத்தினில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடிரென துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுத் தள்ளியதில் 59 பேர் பலியாகியுள்ளனர், 500-க்கும் அதிகமானவர் காயமடைந்துள்ளனர்.


சம்பவத்தின் போது, துப்பாக்கிசுடும் சத்தம் கேட்டதும் அங்கு கூடியிருந்த மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர். 


தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 


அமெரிக்கா மட்டும் இல்லாமல் உலக மக்கள் அனைவரது கவனத்தை ஈர்த்த இச்சம்பவத்தில் 64 வயதான ஸ்டீஃபன் பாட்கோக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அந்த அமைப்புடன் பாட்டாக்குக்கு தொடர்பு இருந்ததற்கான எந்தவித ஆதாரமும் இதுவரை சிக்கவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


இவ்வாறு எந்த துப்பும் கிடைக்காமல் அதிகாரிகள் திணறி வரும் நிலையில், ஸ்டீபன் பாட்டாக்குடன் வசித்து வந்த அவரது காதலியான மாரிலோ டான்லே (62) நேற்று முன்தினம் அமெரிக்கா திரும்பினார். லாஸ் வேகாஸ் நகரில் ஸ்டீபன் பாட்டாக் வெறியாட்டம் போட்டபோது, இவர் பிலிப்பைன்சில் இருந்தார்.


தற்போது நாடு திரும்பியுள்ள மாரிலோ டான்லேவிடம் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். எனினும் அவரை கைது செய்யாமல் பின்னர் விடுவித்தனர். இவர் பிலிப்பைன்சில் இருந்த போது அவருக்கு 1 லட்சம் டாலர் பணத்தை ஸ்டீபன் பாட்டாக் அனுப்பி வைத்ததை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.


ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாரிலோ கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் பணிக்காக சென்று, அங்கே குடியேறியவர் ஆவார்.


முன்னதாக நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் லாஸ் வேகாஸுக்கு சென்றார். அங்கு அவர், தாக்குதலில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை நேரில் சந்தித்து, இரங்கல் தெரிவித்தார்.