கொலம்பியா மாவட்டம்: அமெரிக்கா மீது வடகொரியாவால் ஏவுகணை தாக்குதல் நடத்த முடியாது என டொனால்டு டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வடகொரிய அதிபர் கிம் ஜாங் யங் டெலிவி‌ஷனில் புத்தாண்டு உரை நிகழ்த்தினார். வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணை தயாரித்து வருகிறது.


அமெரிக்கா வரை சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை தயாரிக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. எனவே அந்த ஏவுகணை சோதனை விரைவில் நடத்தப்படும் என்றார்.


அமெரிக்காவை தாக்கும் அளவுக்கு வடகொரியாவால் ஏவுகணை தயாரிக்க முடியாது. எனவே, அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தும் வடகொரியா அரசு எண்ணம் பலிக்காது என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.