அமெரிக்காவின் புகழ் பெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் பலத்த வெடி சப்தம் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் வழக்கம் போல் பயணிகள் சென்று கொண்டிருந்தனர். டெர்மினல் 8 என்ற பகுதியில் பலத்த வெடி சப்தம் கேட்டது. இதனை கேட்டதும் பயணிகள் அலறி அடித்து கொண்டு ஓடினர். யாரோ ஒருவன் கைத்துப்பாக்கியால் சுட்டதாக கூறப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. ஆனால் சுட்டவர் யார் என்று கண்டு பிடிக்க முடியவில்லை. தொடர்ந்து விமான நிலையத்தில் பதட்டம் நிலவுகிறது.


இந்த சம்பவம் குறித்து லாக்ஸ் போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது: பலத்த சப்தம் மட்டுமே வந்தது. இது எங்கிருந்து வந்தது என்னபதை கண்டு பிடிக்க விசாரித்து வருகிறோம். ஆனால்துப்பாக்கிச்சண்டை ஏதும் நடக்கவில்லை என தெரிவிந்த்தனர.