கடந்த சில மாதங்களாகவே, சுனாமி மீண்டும் 2017- டிசம்பர் 31க்குள் வருவதாக ஒரு தகவல் வெளியானது. அதனை அடுத்து தற்போது இந்தோனேஷியாவில் அதிகளவில் திமிங்கலங்கள் கடற்கரையை நெருங்கி வருவதாகவும், மலேசியா பினாங்கு கடற்கரை மீனவர்களின் வலையில் வழக்கத்திற்கு மாறாக பல டன் மீன்கள், கடலில் சிறு பகுதியிலேயே கிடைப்பதாகவும் செய்திகள் கிடைத்துள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவை கடலில் ஏதோ ஒரு இயற்கை பேரிடருக்கான எச்சரிக்கையாக இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கடற்கரை சீற்றமானது 11 நாடுகளையும் கடுமையாக பாதிக்கக் கூடியதாக இருக்கும் எனவும், இந்தமுறை முன்பை காட்டிலும் “பலமடங்கு” அளவில் பெரியதாகவும், ஆக்ரோஷமாகவும் பொங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்த தகவலைத் நமக்க தெரிவித்தவர் Thiruvandrum Forest Wala, Tamilnadu Border, B.K.Research Association – Director Mr.BabuKalayil, என்பவர் ஆவர். இவர்தான் 2004-லும் சுனாமி வருவதற்கு முன்பாகவே தகவல் தெரிவித்து  
அதன் பின்னரே, முன் அறிவிப்பு கொடுத்தற்காக பாராட்டுப்பெற்றவராவார். அன்றய நிலையில் இந்தியாவே அறிந்திராத சுனாமி என்பதனால் யாரும் கவனம் கொள்ளவில்லை.
 
இவர்தான் தற்போது இரு மாநில முதல்வர்களுக்கும் கடந்த 20.09.2017 அன்றே அதிகாரப்பூர்வமாகவும் தெரியப்படுத்தியும் உள்ளார். இந்த தகவலின் உண்மை தன்மை இன்னும் நிரூபிக்கப்படவில்லை, இயற்கை சீற்றம் மனிதனால் தடுக்க முடியாதாகும். என்றாலும் கூட பேரிடர் மேலாண்மை குறித்து  அமைத்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால், தாங்களாகவே தற்காத்து கொள்ளும் திறனாவது மக்களிடையே வளரும்.