கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும், வாடிகன் நகரத்தின் இறையாண்மையுமான போப் பிரான்சிஸ், கனடாவின் பழங்குடியின மக்களுக்கு எதிராக பல கிறிஸ்தவர்கள் செய்த கலாச்சார அழிவுகள் மற்றும் கொடுமைகளுக்கு மன்னிப்பு கேட்டார். நவீன உலகில் மதகுருக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார் போப் பிரான்சிஸ். கடந்த பல நூற்றாண்டுகளாக மதங்களின் பெயரால் உலகெங்கும் நிகழ்ந்த அட்டூழியங்களை அடையாளப்படுத்தி, அவற்றை ஏற்றுக் கொண்டு வரலாற்றின் அங்கமாக அங்கீகரிப்பதன் அவசியத்தை போப் பிரான்சிஸ் உணர்ந்திருக்கிறார். 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐரோப்பியா, அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவில் பல நூறு வருடங்கள் என கிறித்துவ மாதம் நிகழ்த்திய கொடுமைகள், இனப்படுகொலைகளுக்க்கு மன்னிப்பு கேட்கும் போப் ஃபிரான்சிஸ், கவனத்தைக் ஈர்க்கிறார்.


மேலும் படிக்க | தனது மரணத்திற்கு பின்னும் வாரிசாக குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆண்கள்


கத்தோலிக்க சர்ச்களில் சிறார் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட பாதிரிகளுக்கு எதிராக பேசுவது, தன்பாலின ஈர்ப்பினை அங்கீகரித்தது, மத நூல்களில் இருந்து முரண்படும் அறிவியல் கண்டுபிடிப்புகளை ஏற்றுக் கொள்கிறார் போப் பிரான்சிஸ்.


கனடாவின் ஆதிகுடிகளை மெட்டீஸ், இன்னுயிட் என்று அழைக்கிறார்கள். இந்த ஆதிக்குடி மக்களின் பிள்ளைகளை அரசாங்கம் வலுக்கட்டாயமாக பெற்றோர்களிடம் இருந்து பிரித்து அங்கே இருந்த கத்தோலிக்க பள்ளிகளுக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தது.


இது 19ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டின் இறுதி வரை தொடர்ந்த மனிதாபிமானமற்ற சோகம். பள்ளிகளில் சேர்க்கப்பட்ட பிள்ளைகள், தங்கள் பெற்றோரையும் குடும்பத்தினரையும் காண வாய்ப்பில்லாமல், தங்களின் கலாச்சாரம், பழக்க வழக்கங்களில் இருந்து விலக்கப்பட்டு, கத்தோலிக்க வாழ்வுமுறைக்கு தயார்படுத்தப்பட்டனர். 


மேலும் படிக்கும் | ரோபோட்டுகளும் இனி குழந்தைகளை பெற்றெடுக்கும் - புதிய கண்டுபிடிப்பு


1881 மற்றும் 1996 க்கு இடையில் 150,000 பழங்குடியின குழந்தைகள் தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு குடியிருப்புப் பள்ளிகளுக்குக் கொண்டு வரப்பட்டனர். 


கேட்க ஆளில்லாத அந்தப் பிள்ளைகள், பாலியல் துன்புறுத்தல் உட்பட பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானர்கள். இந்தக் கொடுமைகளினால் பல சிறார்கள் இறந்தும் போனார்கள். 2021 முதல் இந்தப் பள்ளிகளின் வளாகங்களில் இருந்து ஆயிரக்கணக்கான உடல்களை தோண்டி எடுத்திருக்கிறார்கள்.


கடந்த ஆண்டு, நூற்றுக்கணக்கான பழங்குடியின குழந்தைகளின் கல்லறைகள், முன்னாள் குடியிருப்பு பள்ளிகளுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது மிகப்பெரிய விவாதங்களை எழுப்பியது.


மேலும் படிக்க | மரணதண்டனையை டிவியில் நேரடியாக ஒளிபரப்ப அனுமதி கோரும் நீதிமன்றம்


கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் இது தொடர்பாக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம் பாலியல் துஷ்பிரயோகம், பட்டினி மற்றும் அடிக்கப்பட்ட குழந்தைகளை "கலாச்சார இனப்படுகொலையின் ஒரு பகுதியாக" அழைத்தது. மேலும் தேவாலயங்களின் தலைமைப் பதவிகளில் பெண்கள் இல்லை என்பதும் தற்போது விவாதப்பொருளாகிவருகிறது.  


ஆதிக்குடிகளின் தலைவர்கள் வாடிகன் பயணித்து போப்பை சந்தித்தனர். அப்போது, கலச்சார அழிவுக்கு திருச்சபை ஒத்துழைத்ததற்கான விஷயத்தில் போப் அவர்களிடம் மன்னிப்புக் கோரினார்.  


"கலாச்சார அழிவு" என்று இந்த கொடுமைகளை விவரித்த போப், இதற்கு தேவாலயங்களின் ஒத்துழைப்பைப் பற்றி வருத்தம் தெரிவித்திருந்தார்.  


'கலாச்சார அழிவுக்கு' திருச்சபையின் ஒத்துழைப்பு குறித்து 85 வயதான போப்பாண்டவர்  வருத்தம் தெரிவித்தார். 


மேலும் படிக்க  | உங்கள் முகத்தை ரோபோக்கு கொடுத்தால் 1.5 கோடி ரூபாய் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ