உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய ரஷ்யாவின் தாக்குதல் 2 மாதங்களைத் தாண்டி தொடர்கிறது. இதனால் இரு தரப்பிலும் பல்லாயிரக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த போரை நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி வரும் உலக நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.  போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி போப் பிரான்சிஸ், ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | கிவ் மீது குண்டு மழை பொழியும் ரஷ்யா; ஐநா தலைவர் பயணத்தின் போது நடந்த தாக்குதல்


இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தான் மாஸ்கோவிற்கு வர விரும்புவதாக 20 நாட்களுக்கு முன் புடினுக்கு செய்தி அனுப்பியதாகவும், அதற்கு இன்னும் பதில் வரவில்லை எனவும் குறிப்பிட்டார். புடின் இந்த நேரத்தில் இந்த சந்திப்பை நடத்த விரும்பவில்லை எனவும் அவர் கூறினார்.


தான் இப்போதைக்கு உக்ரைனுக்கு பயணம் செய்யப்போவதில்லை என்றும், முதலில் மாஸ்கோவிற்குச் சென்று புடினை சந்திக்க வேண்டும் என்றே எண்ணுவதாகவும் போப் பிரான்சிஸ் குறிப்பிட்டார். மேலும், ரஷ்யாவில் உள்ள பழமையான தேவாலயத்திற்கும், ரோம் நகரத்திற்கும் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொடர்பு உள்ளது என்றும், போப் ஆண்டவர்கள் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்வது வழக்கமானது எனவும் அவர் கூறியுள்ளார்.


மேலும் படிக்க | G-20 Summit: பிரதமர் மோடி வாடிகனில் போப்பாண்டவரை சந்தித்தார்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR