மாஸ்கோ டோமோடேடோவா விமான நிலையத்தில் இருந்து, அண்டோனோவ் அன்-148 என்ற விமானம், 65 பயணிகள் மற்றும் 6 ஊழியர்களுடன் புறப்பட்டு சென்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆர்ஸ்க் நகரை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது திடீரென ரேடாரின் தகவல்தொடர்பில் இருந்து விமானம் காணாமல்போனது. இதனையடுத்து விமானம் விபத்தில் சிக்கியது தெரியவந்தது.


இந்த விபத்தில் விமானத்தில் சென்ற பயணிகள் அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற அந்நாட்டு காவல்துறையினர் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.