பிரிட்டனின் உள்ள பர்மிங்காமில், சனிக்கிழமை இரவு நடந்த மிகப்பெரிய கத்தி குத்து சம்பவத்தில், பலர்  காயமடைந்தனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் என்ன காரணம் என்று கண்டுபிடிக்க போலீசார் இன்னும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் சனிக்கிழமை இரவு பலர் கத்தியால் குத்தப்பட்டனர். இது மிகவும் ஆபத்தான சம்பவம் என போலீஸார் கூறியுள்ளனர். முதலில் ஒரு நபர் தான் கத்தியால் குத்தப்பட்டு தாக்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆனால், சிறிது நேரத்திற்குள் அதிகமானோர் காயமடைந்ததாக செய்திகள் வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் பிறகு, அனைத்து அவசர சேவைகளும் ஒன்றிணைந்து செயல்படத் தொடங்கின. பலர் காயமடைந்துள்ளனர் என்றாலும், எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்பது உறுதிப்படுத்தவில்லை. இது மிகவும் ஆபத்தான சம்பவம் என போலீஸார் கூறியுள்ளனர்



அங்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டுபிடிக்க விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக,  வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறை அறிக்கை அளித்துள்ளது. விசாரணை முழுமை அடையும் முன்னால் எதுவும் கூற இயலாது என காவல் துறையினர் தெரிவித்தனர். அப்பகுதியில் உள்ள அனைவரும் வெளியேற்றப்பட்டு சில சாலைகளும் மூடப்பட்டுள்ளன.


இதை ஒரு 'பெரிய நிகழ்வு' என்று அழைப்பதன் மூலம் விஷயம் தீவிரமானது என்பது தெளிவாகிறது, மேலும் இது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய சம்பவம் என்று கருதப்படுகிறது.
 கத்தி குத்து சம்பவம் நடந்த கிராமம், ஓரின சேர்க்கையாளர்கள் வசிக்கும் கிராமம் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | பாகிஸ்தானில் கொரோனா தொற்று திடீரென சரிந்ததன் ’மர்ம’ பின்னணி என்ன..!!!