புதுடெல்லி: தலிபான்களின் கொடூர முகம்  உலகின் முன் அம்பலமாகியுள்ளது. தலிபான்களின் பயங்கரவாதிகள் மட்டுமல்ல, நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கொடூரமானவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வந்தடைந்த பெண்ணின் நிம்மதி புன்னகை தாலிபான் பயங்கரவாதிகளை அம்பலப்படுத்தியுள்ளது. அவர்களில் ஒருவர் தாலிபான் பயங்கரவாதிகள் சிறுமிகளின் இறந்த உடல்களை கூட விட்டு வைக்காமல் பாலியல் பலாத்காரம் செய்வதாகவும் அவர் கூறியுள்ளார் அவர்களிடமிருந்து மனிதநேயத்தை எதிர்பார்க்க முடியாது. ஆப்கானிஸ்தான் பெண்கள் பெரும் ஆபத்தில் உள்ளனர் என அவர் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சடலங்களையும் பாலியல் பலாத்காரம் செய்யும் தலிபான்கள் 


தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தலிபான்கள் (Taliban) இறந்த உடல்களையும் பாலியல் பலாத்காரம் செய்வதாக இந்தியா வந்தடைந்துள்ள முஸ்கான் கூறினார். அந்த பெண் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்து விட்டாரா என்பது பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. பெண்களை சித்திரவதை செய்வார்கள், பாலியல் அடிமைகளாக வைத்திருப்பார்கள். கடத்திக் கொண்டு செல்வார்கள், என்ன வேண்டுமானாலும் மனதில் தோன்றியதை செய்வார்கள்.  ஆத்திரத்தில் கொன்ற பிறகும், அவர்கள் உடலை கூட விட்டு வைக்காமல் அதனுடனும் உடல் உறவு கொள்வார்கள். இது வெறும் ஆரம்பம் தான். அந்த மக்கள் நிறைய செய்கிறார்கள்.


ALSO READ | பாலியல் அடிமை முதல் தீக்குளிப்பது வரை; ஆப்கான் பெண் நீதிபதி விவரித்த திகில் சம்பவங்கள்


தாலிபானிகளின் கொடூர மனம்


ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு பெண்ணை தங்களுடன் அனுப்ப வேண்டும் என்று தாலிபான்கள் விரும்புகிறார்கள் என்று அந்த ஆப்கான் பெண்மணி மேலும் கூறினார். அவர்கள் 10-12 வயதுடைய பெண்களை அழைத்துச் செல்கிறார்கள். நாங்கள் மாறிவிட்டோம் என்று ஊடகங்களிடம் பொய் சொல்கிறார்கள். இது வெறும் ஏமாற்று வேலை. அவர் சிறுமிகளுக்கு மருந்து கொடுத்து மயக்கமடைச் செய்து அவர்களை சவப்பெட்டியில் வைத்து, பாகிஸ்தானுக்கு கடத்தி செல்கிறார்கள். நாங்கள் அங்கு இருந்தபோது, ​​எங்களுக்கு நிறைய அச்சுறுத்தல்கள் வந்தன.


ALSO READ | ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்திற்கு இடமில்லை; ஷரியத் சட்டம் தான்: தாலிபான்


தலிபான்கள் கோரிய பெண்களின் பட்டியல் 


முன்னதாக, தலிபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் (Afghanistan) தங்கள் ஆக்கிரமிப்பு பகுதிகளின் மதகுருமார்களிடம் 12 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களின்  விபரங்கள் அடங்கிய பட்டியலை கோரியுள்ளனர். இந்த பெண்கள் தங்கள் பயங்கரவாதிகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தாலிபான் வற்புறுத்துகிறது. ஆனால் உண்மை நிலை என்னவென்றால், அவர் அவர்களை பாலியல் அடிமைகளாக வைத்திருக்க விரும்புகிறார்கள். 


அண்மையில் ஒரு பெண் உணவை சுவையாக சமைக்காததால் தலிபான் தீவிரவாதிகளால் எரிக்கப்பட்டதாக செய்தி வந்தது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | "இந்தியா சொர்க்க பூமி”: இந்தியாவிற்கு அகதியாக வந்துள்ள ஆப்கான் பெண்மணி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR