சோமாலியா மொகாதிஷுவில் உள்ள பிரபல நாசா-ஹாப்லாட் உணவு விடுதி அருகே வெடிகுண்டு நிரப்பட்ட 2 லாரிகளில் வந்த தீவிரவாதிகள் அதனை வெடிக்க செய்தனர். இந்த தாக்குதலில் மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட சுமார் 25 பேர் பலியாகினர். 30 பேர் படுகாயம் அடைந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணுவம் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றனர். இந்த பகுதியில் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் கடும் சண்டை நடந்து வருவதாக ராணுவ தரப்பில் கூறப்பட்டுளது.


இந்த தீவிரவாத தாக்குதலுக்கு ஆப்ரிக்க இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான, அல்-சபாப் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.