இலங்கையில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் ஐஎஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை நாளன்று பிரார்த்தனை நடைபெற்ற தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தினர். இதில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


இந்நிலையில், இன்று பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில், ஐஎஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். பொதுமக்கள் தரப்பில் ஒருவர் பலியானதாகவும், 3 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.