இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதை அடுத்து தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 பயங்கரவாத இயக்கங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த மாதம் 21-ஆம் தேதி தற்கொலைப்படையை சேர்ந்த ஒரு பெண் உள்பட 9 பயங்கரவாதிகள் தேவாலயங்கள் மற்றும் சொகுசு ஓட்டல்களை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 10 இந்தியர்கள் உள்பட 258 பேர் பலியாகினர்., சுமார் 500 பேர் காயமடைந்தனர்.


இந்த கொடூர தாக்குதலுக்கு பின்னால் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும் ஐ.எஸ் இயக்கத்தின் தூண்டுதலோடு இலங்கையில் இயங்கி வரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஈஸ்டர் தாக்குதல் என்று அழைக்கப்படும் இந்த தாக்குதல் தொடர்பாக சுமார் ஆயிரம் பேரை காவல்துறையினர் இதுவரை கைது செய்துள்ளனர்.


ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் இயல்புநிலைக்கு திரும்பிவரும் இலங்கையின் வடமேற்கு பகுதியில் இருபிரிவினருக்கு இடையில் வெடித்த மோதலை தொடர்ந்து பல்வேறு நகரங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு விரும்பத்தகாத பதிவை மையமாக வைத்து கடலோர நகரமான சிலாபம் நகரில் நேற்று முன்தினம் இருதரப்பினருக்கு இடையில் வெடித்த கலவரம் பிற பகுதிகளுக்கும் பரவியதில் ஒருவர் கொல்லப்பட்டார்.


இந்நிலையில், ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமான தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாத்தே மில்லத்தே இப்ராஹிம், வில்லாயத் அஸ் செய்லானி ஆகிய அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.