இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நீடிப்பார் என்று சபாநாயகர் கருஜெயசூர்யா கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக அவர், அதிபர் சிறிசேனாவுக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-


இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே நீடிக்கிறார். ஜனநாயகத்தை காக்கவும், நல்ல நிர்வாகத்திற்காகவும் அரசின் தலைவர் என்ற உத்தரவை பெற்றுள்ளார். இதனால் ரணிலின் அதிகாரத்தை மீண்டும் ஒப்படைக்க வேண்டும். 


நாடாளுமன்றம் நவம்பர் 16 வரை முடக்கி வைத்தது, நாட்டில் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் அடுத்த பிரதமரை நாடாளுமன்றம் தேர்வு செய்யும் வரை ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக நீடிப்பார். 


இவ்வாறு கூறினார்.