ப்ளோரிடா: ஐக்கிய நாடுகளின் ப்ளோரிடாவில், Pizza-விற்கு ஆசைப்பட்டு Pizza டெலிவரி வாகனத்தை திருடிய இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் திரியுலகில் சமீபத்தில் 'காக்கா முட்டை' திரைப்படத்தினை நாம் பார்த்திருப்போம், இப்படத்தில் இரண்டு சிறுவர்கள் Pizza-விற்கா வேடியக்கையான செயல்களை செய்து அனைவரது பாராட்டினையும் பெற்றனர். ஆனால் ப்ளோரிடாவில் நடைப்பெற்ற சம்பவம் அவ்வாறு இல்லை.


ரோஜிலோ செபாஸ்டீன் (14) மற்றும் மிகுள் கர்ஷியா (12) என்று இரு சிறுவர்கள் Pizza ஆசையினால், Domino's Pizza டெலிவரி வாகனத்தினையே திருடியுள்ளனர். எனினும் அவர்களால் வாகனத்தினை அதிக தொலைவிற்கு ஓட்டிச் செல்ல முடியவில்லை. இதனால் காவலர்களிடம் மாட்டிக்கொண்டுள்ளனர்.


இதுகுறித்து அந்த Pizza டெலிவிரி வாகனத்தினை ஓட்டிச் சென்ன ஐசக் சேவியர் தெரிவிக்கையில்.. கடந்த வெள்ளியன்று கார்ஷியா பகுதியில் வாகனத்தினை விட்ட Pizza டெலிவிரி செய்ய செல்கையில் அவரது வாகனத்தினை இவ்விருவரும் எடுத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார். இவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துரையினர் அந்த வாகனத்தினை அருகில் இருக்கும் ரயில்வே தண்டவாளம் அருகில் ஓட்டுநர் இல்லா நிலையில் கைப்பற்றியுள்ளனர்.


பின்னர் அங்கு சுற்றித்திரிந்த இச்சிறுவர்களை பிடித்து விசாரிக்கையில், தங்கள் குற்றத்தினை ஒப்புக்கொண்ட அவர்கள், தங்களால் வாகனத்தை ஓட்ட முடியாததால் வாகனத்தை விட்ட தப்பிச் செல்ல முயன்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இச்சிறுவர்கள் காவல்துறை கண்கானிப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது!