பிரிட்டன் பார்லிமென்ட் அட்டாக்  ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பு


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


பிரிட்டன் பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில் பார்லிமென்ட் வாளகம், வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் அருகே நேற்று மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் பலியானதாகவும் 40 பேர் காயமடைந்ததாகவும், அதில் 29 பேர் மருத்துவமானையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த தாக்குதல் தொடர்பாக 8 பேரை கைது செய்து இங்கிலாந்து காவல்துறை விசாரித்து வருகிறது. இந்த கொடூர தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.