பிரதமர் மோடி அமெரிக்கா நிலையில், ஹிஸ்புல் முஜாகிதீனை, சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைக்குறித்து பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கம் பாகிஸ்தான் உதவியுடன் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்து வருகிறது. 


இந்த இயக்கத்தின் தலைவனாக இருப்பவன் பயங்கரவாதி சலாவுதீன். இந்தியாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மூளையாக செயல்பட்டவன். பதன்கோட் தாக்குதலுக்கும் பொறுப்பு ஏற்றவன். பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றி வருகின்றான். 


பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில், தற்போது அவனை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்து உள்ளது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பை இந்தியா வரவேற்று உள்ளது.