வாஷிங்டன்: வடகொரியா தலைவர் கிம்ஜோங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்பும் மே மாதம் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏவுகணை சோதனை மற்றும் அணு சோதனை நடத்திவந்த வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன், இதனை குறைத்துக் கொள்ளப்போவதாக அறிவித்தார். இந்நிலையில், தென்கொரியா அமைதி குழுவினர் கடந்த வாரம் வடகொரியா தலைவர் கிம்ஜோங் உன்னை சந்தித்தனர். இதனை அமெரிக்க அதிபர் டெனால்டுடிரம்ப் வெகுவாக பாராட்டியுள்ளார்.


இது தொடர்பாக ஆலோசிக்க தென்கொரியா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூங்-இல் யோங்க், அமெரிக்கா சென்று அதிபர் டெனால்டு டிரம்ப்பை சந்தித்தார். பின்னர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி,வட கொரியா தலைவரை தென்கொரியா குழுவினர் சந்தித்தது குறித்து டெனால்டு டிரம்ப் பாராட்டினார்.


இதன் மூலம் அணு சோதனை குறைப்பு நடவடிக்கையில் கிம்ஜோங் உன் இறங்கியுள்ளதை தெரிவித்தேன். பின்னர் வட கொரிய தலைவர் கிம்ஜோங் உன் டிரம்ப்பை சந்திக்க விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறினேன். டிரம்ப்பும் சந்திக்க தயார் என்றார். 


வரும் மே மாதம் இரு நாட்டு தலைவர்களும் முதல்முறையாக சந்திக்கின்றனர் என்றார். மேலும் இருநாட்டு தலைவர்கள் சந்திப்பு எங்கு என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.