அமெரிக்காவில் புயலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு கடும் வெள்ளப் பெருக்கும், சேதங்களும் ஏற்பட்டுள்ளன. அதில் விர்ஜீனீயா மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 23 பேர் பலியாகி உள்ளனர். இதைத்தொடர்ந்து விர்ஜீனியாவில் 44 பகுதிகளில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.


அந்நாட்டின் இதுவரை மொத்தம் 55 பகுதிகளுக்கு 44 அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அங்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 
இந்த நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள மிகவும் மோசமான வெள்ளப்பெருக்கு என அந்நாட்டு ஆளுநர் ஏர்ல் ராய் டோம்ப்ளின் கூறியுள்ளார்.


வீடுகளை சுற்றி வெள்ளம் தேங்கி நிற்கிறது. அங்கு சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணியில் தேசிய பாதுகாப்பு படை  வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.