இந்தியாவில் உள்ள வங்கிகளில் சுமார் 9000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி விட்டு, தற்போது வங்கிகள் கடனை திரும்ப கேட்டதும் இங்கிலாந்தில் உள்ள லண்டனில் சென்று தஞ்சமடைந்திருக்கும் தொழிலதிவர் விஜய் மல்லையா இந்திய அரசுக்கு தண்ணி காட்டி வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது மல்லையா, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டியை காண மைதானத்திற்கு வந்திருந்தார்.


மேலும், முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கவாஸ்கர் உடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவின. 


இந்நிலையில், ஓவல் மைதானத்தில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியையும் காண மல்லையா நேரில் வந்திருந்தார். ஆனால், அப்போது, சுற்றியிருந்த ரசிகர்கள் அவரை நோக்கி ‘திருடன்...திருடன்’ என கூச்சலிட்டுள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.