2ஜி மேல்முறையீடு மனு தொடர்பாக கனிமொழி மற்றும் ஆ.ராசாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுபியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக கனிமொழி, ராஜா மீது குற்றம்சாட்டப்பட்டு சிபிஐ விசாரணை நடத்தியது. கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கடந்த ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி வழக்கில் அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டது. 


தீர்ப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி சைனி அறிவித்தார். 


பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2G அலைவரிசை வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, கருணாநிதி மகளான கனிமொழி  உள்ளிட்ட 14 பேர் குற்றமற்றவர்கள் என சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 


இதையடுத்து, திமுக ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.


இந்நிலையில், 2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, அமலாக்கத்துறை சார்பில் நேற்றுமுன்தினம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.


இந்த மனு, மீதான விசாரணை தலைமை நீதிபதி கீதா மிட்டல், நீதிபதி சி.ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.


விசாரணையில் 2ஜி மேல்முறையீடு மனு தொடர்பாக கனிமொழி மற்றும் ஆ.ராசாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுபியுள்ளது.