மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரியில் அடுத்த அதிரடி அறிவிப்பு: 50% அகவிலைப்படி, ஊதிய ஏற்றம்

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண விகிதங்கள், ஏஐசிபிஐ குறியீட்டின் (AICPI Index) அரையாண்டுத் தரவைப் பொறுத்து.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 25, 2023, 10:53 AM IST
  • அகவிலைப்படி AICPI குறியீட்டால் தீர்மானிக்கப்படுகிறது.
  • 4 மாதங்களுக்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
  • புதிய ஊதியக்குழு 2024 -இல் அமல்படுத்தப்படுமா?
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரியில் அடுத்த அதிரடி அறிவிப்பு: 50% அகவிலைப்படி, ஊதிய ஏற்றம் title=

7வது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண அதிகரிப்பை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. 2023 ஜனவரியில் அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரித்ததை தொடர்ந்து ஜூலை 2023 -இலும் அரசு அகவிலைப்படியை 4 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதன் பிறகு ஊழியர்களின் மொத்த அகவிலைபப்டி 42% -லிருந்து 46% ஆக அதிகரித்துள்ளது. நவம்பரில் அதிகரித்த அகவிலைப்படியும் ஜூலை மாதம் முதலான 3 மாத அரியர் தொகையும் சம்பளத்துடன் ஊழியர்களுக்கு வழங்கப்படும். இனி அடுத்த அகவிலைப்படி அதிகரிப்பு 2024 இல் இருக்கும். இருப்பினும், அடுத்த முறை டிஏ எவ்வளவு அதிகரிக்கும் என்பது ஏஐசிபிஐ குறியீட்டின் அரையாண்டுத் தரவைப் பொறுத்தது.

அகவிலைப்படி AICPI குறியீட்டால் தீர்மானிக்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண விகிதங்கள், ஏஐசிபிஐ குறியீட்டின் (AICPI Index) அரையாண்டுத் தரவைப் பொறுத்து. ஊழியர்களின் அகவிலைபப்டி ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய அரசால் ஆண்டுக்கு இருமுறை திருத்தப்படுகிறது. ஜனவரி மாத அகவிலைப்படி முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையிலும் ஜூலை மாதத்திற்கான அகவிலைபப்டி ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையிலும் தீர்மானிக்கப்படுகின்றன. இப்போது ஜூலை 2023 -க்கான புதிய டிஏ விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

4 மாதங்களுக்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் இன்னும் வெளியிடப்படவில்லை

இதுவரை, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் குறியீடு 139.2 புள்ளிகளையும், டிஏ மதிப்பெண் 47.98 சதவீதத்தையும் எட்டியுள்ளது. இப்போது செப்டம்பர் மாதத்திற்கான புள்ளிவிவரங்கள் அக்டோபர் 28 - 30 தேதிகளில் வெளியிடப்படும். அதில் ஏற்றம் இருந்தால் அது நல்ல அறிகுறியாக இருக்கும். இதன்பிறகு அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களின் புள்ளி விவரங்கள் வெளியாகும். அதன்பிறகு 2024 ஜனவரியில் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பது முடிவு செய்யப்படும். ஆனால், இறுதி முடிவை மத்திய அரசுதான் எடுக்கும்.

அகவிலைப்படி 50% ஆக இருந்தால், அது பூஜ்ஜியமாக மாறுமா?

அடுத்த ஆண்டு ஜனவரி 2024 -இல் அகவிலைப்படி (Dearness Allowance) 4% உயர்த்தப்பட்டால், அகவிலைப்படி 50% ஐ எட்டும். அத்தகைய சூழ்நிலையில் ஊழியர்களின் சம்பளம் திருத்தப்படும். ஏனெனில் ஏழாவது ஊதியக் குழுவை அமைக்கும்போது, மத்திய அரசு அகவிலைப்படியை மறுபரிசீலனை செய்யும் விதிகளை நிர்ணயம் செய்திருந்தது. அப்போது டிஏ 50% ஆகும்போது அது பூஜ்ஜியமாக மாற்றப்படும் என்றும் அகவிலைப்படி தொகை அடிபப்டை சம்பளத்துடன் சேர்க்கப்படும் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2013 -இல் 7வது ஊதியக்குழு (7th Pay Commisison) அமைக்கப்பட்டது, அதன் பரிந்துரைகள் 2016ல் அமல்படுத்தப்பட்டன.

மேலும் படிக்க | Business Idea: ரூ.20,000 இருந்தால் போதும்... வருமானத்தை அள்ளித்தரும் தீபாவளி பிசினஸ்..!!

புதிய ஊதியக்குழு 2024 -இல் அமல்படுத்தப்படுமா?

டிஏ 50 சதவீதத்தை அடைந்து பூஜ்ஜியமாக மாறினால், மத்திய அரசு அடுத்த புதிய ஊதியக் குழுவை, அதாவது எட்டாவது ஊதியக்குழுவை (8th Pay Commission) அமைக்க வேண்டும் அல்லது சம்பள அமைப்பில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் அல்லது சம்பளத்தை அதிகரிக்க புதிய விதியைக் கொண்டுவர வேண்டும். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் குறித்து முக்கிய முடிவை எடுக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இது நடக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தான் தெரிகிறது. 2022 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அரசாங்கம் அடுத்த சம்பள ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரை யோசனை செய்யவில்லை என தெளிவுபடுத்திய போதிலும், இந்த நிலைப்பாடு மாறும் என தோன்றுகிறது.

இப்படித்தான் அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது

- மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ (DA Hike) இந்த அடிப்படையில் கணக்கிடப்படுகிறது - {கடந்த 12 மாதங்களின் சராசரி அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (அடிப்படை ஆண்டு-2001=100-115.76/115.76}X100. 

- மத்திய பொதுத் துறை ஊழியர்களுக்கு, சூத்திரம் பின்வருமாறு - {சராசரி 3 மாதங்கள் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (அடிப்படை ஆண்டு-2001=100-126.33/126.33}X100.

- அகவிலைப்படி மற்றும் அடிப்படை சம்பளத்தின் தற்போதைய விகிதத்தை பெருக்குவதன் அடிப்படையில் அகவிலைப்படியின் அளவு கணக்கிடப்படுகிறது. 

- உதாரணமாக, ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ. 18 ஆயிரமாகவும், டிஏ 46 சதவீதமாகவும் இருந்தால், ஊழியர்களின் டிஏ ஃபார்முலா (45 x 29200) / 100 ஆக இருக்கும். அதேபோல், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியும் கணக்கிடப்படுகிறது.

மேலும் படிக்க | 'அனைத்து ஏற்பாடுகளும் ரெடி': ரூ.1000 நோட்டு குறித்து ரிசர்வ் வங்கி அளித்த முக்கிய தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News