New Wage Code:1 ஜூலை முதல் சம்பளம், வார விடுமுறை என அனைத்திலும் மாற்றம்

New Wage Code: புதிய ஊதியக் குறியீடு ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான வரைவு விதிகளை அனைத்து மாநிலங்களும் அளித்துள்ளன. புதிய விதியின் கீழ், ஊழியர்களின் சம்பளம், விடுமுறை போன்றவற்றில் மாற்றங்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 25, 2022, 01:16 PM IST
  • வருடத்தின் விடுமுறை நாட்கள் 300 ஆக அதிகரிக்கும்.
  • சம்பள அமைப்பு மாறும்.
  • மாத விடுமுறை நாட்கள் அதிகரிக்கும்.
New Wage Code:1 ஜூலை முதல் சம்பளம், வார விடுமுறை என அனைத்திலும் மாற்றம் title=

புதிய ஊதியக் குறியீடு புதுப்பிப்புகள்: புதிய ஊதியக் குறியீட்டை அரசாங்கம் விரைவில் அமல்படுத்தலாம். முன்னதாக இது ஏப்ரல் 1, 2021 முதல் நடைமுறைக்கு வருவதாக இருந்தது. அதன் பிறகு, இது அக்டோபர் முதல் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. எனினும், மாநில அரசுகள் இதற்கான ஏற்பாடுகளை செய்து முடிக்காததால் அது செயல்படுத்தப்படவில்லை. 

இப்போது புதிய ஊதியக் குறியீடு ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான வரைவு விதிகளை அனைத்து மாநிலங்களும் அளித்துள்ளன. புதிய விதியின் கீழ், ஊழியர்களின் சம்பளம், விடுமுறை போன்றவற்றில் மாற்றங்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

1. வருடத்தின் விடுமுறை நாட்கள் 300 ஆக அதிகரிக்கும்

ஊழியர்களின் ஈட்டிய விடுப்பு (ஏர்ண்ட் லீவ்) 240-ல் இருந்து 300 ஆக உயரும். தொழிலாளர் சட்டத்தின் விதிகளில் மாற்றங்கள் தொடர்பாக தொழிலாளர், தொழிலாளர் சங்கம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகளுக்கு இடையே பல விதிகள் விவாதிக்கப்பட்டன. இதில் ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை 240-லிருந்து 300 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

2. சம்பள அமைப்பு மாறும்

புதிய ஊதியக் குறியீட்டின் கீழ், ஊழியர்களின் சம்பளக் கட்டமைப்பில் மாற்றம் இருக்கும். அவர்களின் டேக் ஹோம் சம்பளம் குறையக்கூடும். ஊதியக் குறியீடு சட்டம், 2019 இன் படி, ஒரு பணியாளரின் அடிப்படை சம்பளம் நிறுவனத்தின் (சிடிசி) செலவில் 50% க்கும் குறைவாக இருக்கக்கூடாது. தற்போது, ​​பல நிறுவனங்கள் அடிப்படை சம்பளத்தை குறைத்து,அதிக அலவன்ஸ்களை வழங்குகின்றன. இதனால் நிறுவனத்தின் சுமை குறைகிறது.

மேலும் படிக்க | New Wage Code: ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி, 3 நாட்கள் வார விடுமுறை, விதிகளில் மாற்றம் 

3. கொடுப்பனவுகளில் குறைப்பு 

ஒரு ஊழியரின் நிறுவனத்திற்கான செலவு (CTC) இல் மூன்று முதல் நான்கு கூறுகள் உள்ளன. அடிப்படை சம்பளம், வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA), பிஎஃப் போன்ற ஓய்வூதிய பலன்கள், பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் மற்றும் எல்டிஏ மற்றும் பொழுதுபோக்கு அலவன்ஸ் போன்ற வரி சேமிப்பு கொடுப்பனவுகள் இதில் அடங்கும். இப்போது புதிய ஊதியக் குறியீட்டில், மொத்த சம்பளத்தில் 50% க்கு மேல் கொடுப்பனவுகள் கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், ஒரு ஊழியரின் சம்பளம் மாதம் ரூ. 50,000 எனில், அவருடைய அடிப்படைச் சம்பளம் ரூ.25,000 ஆக இருக்க வேண்டும், மீதமுள்ள ரூ.25,000-ல் அவரது அலவன்ஸ்கள் இருக்க வேண்டும். 

அதாவது, இதுவரை நிறுவனங்கள் அடிப்படை சம்பளத்தை 25-30 சதவீதமாக வைத்து, மீதமுள்ள தொகையை அலவன்ஸ்களாக வழங்கின. இனி அடிப்படை சம்பளத்தை 50 சதவீதத்திற்கு குறைவாக வைத்திருக்க முடியாது. அத்தகைய சூழ்நிலையில், புதிய ஊதியக் குறியீட்டின் விதிகளை அமல்படுத்த நிறுவனங்கள் பல கொடுப்பனவுகளை குறைக்க வேண்டிய நிலை வரும். 

4. புதிய ஊதியக் குறியீட்டில் என்ன சிறப்பு உள்ளது

புதிய ஊதியக் குறியீட்டில் உள்ள பல விதிகள், அலுவலகத்தில் பணிபுரியும் சம்பள வர்க்கம், ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஆகியவர்களை பாதிக்கும். ஊழியர்களின் சம்பளம் முதல், அவர்களின் விடுமுறை நாட்கள் மற்றும் வேலை நேரம் என பலவற்றில் மாற்றம் இருக்கும். 

5. மாத விடுமுறை நாட்கள் அதிகரிக்கும்

புதிய ஊதியக் குறியீட்டின்படி வேலை நேரம் 12 ஆக உயரும். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அளித்த தகவலின்படி, புதிய விதியில் வாரத்திற்கு 48 மணிநேரம் என்ற விதி பொருந்தும். உண்மையில் 12 மணி நேரம் வேலை மற்றும் 3 நாட்கள் விடுப்பு விதி குறித்து சில தொழிற்சங்கங்கள் கேள்வி எழுப்பியிருந்தன. இது குறித்து விளக்கம் அளித்த அரசு, வாரத்தில் 48 மணி நேரம் வேலை என்ற விதி இருக்கும் என்றும், ஒருவர் 8 மணி நேரம் வேலை செய்தால், வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்றும், ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

ஒரு நிறுவனம் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலையை ஏற்றுக்கொண்டால், மீதமுள்ள 3 நாட்களுக்கு ஊழியருக்கு விடுப்பு கொடுக்க வேண்டும். வேலை நேரம் அதிகரித்தால், வேலை நாட்களும் 6க்கு பதிலாக 5 அல்லது 4 ஆக இருக்கும். ஆனால் இதற்காக, ஊழியர் மற்றும் நிறுவனத்திற்கு இடையே ஒரு ஒப்பந்தம் இருப்பது அவசியமாகும்.

மேலும் படிக்க | ஊழியர்களுக்கு அட்டகாச செய்தி: EPF-ல் வரக்கூடும் 66% அதிகரிப்பு, கோடீஸ்வரராக ஓய்வு பெறலாம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News