Diabetes: சர்க்கரை நோய் 7 நாட்களில் குறைப்பது எப்படி?

Tips To Keep Diabetes Under Control:  சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது எளிதல்ல. ஆனால் உங்கள் வழக்கமான சில பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டால் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம். எனவே சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 26, 2022, 04:50 PM IST
  • நீரிழிவு நோயின் போது இந்த வழக்கத்தைப் பின்பற்றவும்
  • இரத்த சர்க்கரையின் அறிகுறிகள்
  • தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள்
Diabetes: சர்க்கரை நோய் 7 நாட்களில் குறைப்பது எப்படி? title=

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது எளிதல்ல. உங்கள் வழக்கத்தில் சில பழக்கங்களைச் சேர்த்தால் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம். ஒவ்வொரு நீரிழிவு நோயாளியின் மருந்தளவு மற்றும் உணவு முறை வேறுபட்டது. சிலர் இயற்கையான முறைகளால் இரத்த சர்க்கரை அளவை குறைக்க விரும்புகிறார்கள், ஆனால் அதே நேரத்தில் சிலர் மருந்துகளை நம்பியிருக்கிறார்கள். ஆனால் சில குறிப்புகள் அல்லது பழக்கவழக்கங்களை அனைவரும் பின்பற்றலாம். அதன்படி உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், நீங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை என்ன என்பதை இங்கே விரிவாக தெரிந்துக்கொள்ளுங்கள்.

இரத்த சர்க்கரையின் அறிகுறிகள்
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் போது, சோர்வு, தலைவலி, மங்கலான பார்வை மற்றும் தலை பாரத்துடன் இருப்பது போன்று இருக்கும். உடலில் சர்க்கரையின் அளவானது அதிகரிக்கும் நேரம், எப்போதுமே பசியுடன் இருப்பது போன்று உணரக்கூடும். போதிய அளவில் தண்ணீர் பருகாமல் இருந்தால், உடலானது வறட்சியடைய ஆரம்பிக்கும். மறுபுறம், இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் போது நடுக்கம், பசி, வியர்வை, அமைதியின்மை மற்றும் எரிச்சல் ஆகியவை உணரப்படுகின்றன.

மேலும் படிக்க | Heart Health: இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் பழக்கவழக்கங்கள்

நீரிழிவு நோயின் போது இந்த வழக்கத்தைப் பின்பற்றவும்

இரத்த சர்க்கரை அளவைக் கண்காணிக்கவும்
உங்களுக்கு நீரிழிவு இருந்தால், ஒவ்வொரு நாளும் இரத்த சர்க்கரை அளவைக் கண்காணிப்பது முக்கியம். இந்தப் பழக்கத்தை உங்கள் வழக்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். தினமும் காலையில் உணவுக்கு முன் சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும். எந்த செயல்பாடு உங்கள் உடலை எவ்வாறு பாதிக்கிறது என்பதை இதன் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

சரியான நேரத்தில் மருந்தை எடுத்துக் கொள்ளுங்கள்
சர்க்கரை நோயாளிகள் சரியான நேரத்தில் மருந்தை உட்கொள்ள வேண்டும். பலர் இன்சுலின் மருந்தை கவனித்துக்கொள்வதில்லை, இதன் காரணமாக அவர்களின் இரத்த சர்க்கரை அளவு ஏற்ற இறக்கமாக உள்ளது. அதேபோல் சிலர் மருந்தை உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும் என்ற தவறான எண்ணத்தை கொண்டுள்ளனர், ஆனால் அது உண்மையில்லை. மருந்துகளுடன் ஆரோக்கியமான வழக்கத்தை பின்பற்றுவது உங்கள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். 

தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள்
உடல் செயல்பாடு மூலம் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தலாம். நீங்கள் சுறுசுறுப்பாக இருக்கும்போது, ​​செல்கள் சர்க்கரை அளவைக் குறைக்கின்றன. உடலில் இன்சுலின் அளவு சரியாக இயங்குவதற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம்.

தூங்கும் முன் கடைசியாக சர்க்கரை அளவை சரிபார்க்கவும்
தூங்கும் முன் கடைசியாக சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும். இதன் போது, ​​சர்க்கரை அளவை சரிபார்த்து, நாள் முழுவதும் சர்க்கரை அளவை சரியாகக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பின்பற்றினீர்களா இல்லையா என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Monkeypox: குழந்தைகளில் காணப்படும் அறிகுறிகள் என்ன? முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News