புற்றுநோயை குணப்படுத்த ஆயுர்வேதம் பயனளிக்குமா? மருத்துவ ஆய்வுகள் தரும் நம்பிக்கை...

Ayurvedic Cancer Treatment :  இந்தியாவில் ஏற்படும் மரணங்களில் 7.2% புற்றுநோய் மற்றும் அதன் பக்கவிளைவுகளால் ஏற்படுகிறது! இந்திய மருத்துவ சிகிச்சை இதற்கு பலனளிக்குமா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 28, 2024, 11:09 AM IST
  • இந்தியாவில் ஏற்படும் மரணங்களுக்கு 7.2% காரணம்
  • புற்றுநோய் மற்றும் அதன் பக்கவிளைவுகள்
  • புற்றுநோய்க்கு இந்திய மருத்துவ சிகிச்சை
புற்றுநோயை குணப்படுத்த ஆயுர்வேதம் பயனளிக்குமா? மருத்துவ ஆய்வுகள் தரும் நம்பிக்கை... title=

இந்த நூற்றாண்டில் கடுமையாகப் பரவி வரும் மிகக் கொடிய நோய்களில் ஒன்றான புற்றுநோய் உலகின் மிக ஆபத்தான கொலைகார நோயாக மாறிவிட்டது. இதை உலக சுகாதார அமைப்பும் ஒப்புக் கொண்டுள்ளது. கொடிய இந்த நோயை எதிர்த்துப் போராட விஞ்ஞானிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்; ஆனால், இதுவரை புற்றுநோயை குணப்படுத்தும் சிகிச்சை என்று ஒன்று இதுவரை 100% கண்டுபிடிக்கப்படவில்லை என்பது கசப்பான உண்மை.  

புற்றுநோய்க்கான சர்வதேச ஏஜென்சியின் (International Agency for Research on Cancer - IARC) அண்மை கண்டுபிடிப்புகளில், இந்தியாவில் ஏற்படும் மரணங்களில் 7.2% புற்றுநோய் மற்றும் அதன் பக்கவிளைவுகளால் ஏற்படுகிறது என்பது நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது.

புற்றுநோய் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், நவீன மருத்துவ அறிவியல் மூலம் மட்டுமல்ல, பாரம்பரிய ஆயுர்வேத முறைகள் மூலமாகவும் புற்றுநோயை குணப்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது. விஞ்ஞானிகளும் இதுதொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர்.

புற்றுநோய் சிகிச்சையில் ஆயுர்வேதம்

புற்றுநோயாளிகளின் உடல் ஆரோக்கியத்தை மட்டும் அணுகாமல் அவர்களின் மன நலத்திற்கும் முன்னுரிமை அளிக்கிறது ஆயுர்வேதம் என்பது குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது. பழமையான இந்திய உள்நாட்டு மருத்துவ முறையான ஆயுர்வேதம், இயற்கை மருந்துகளைப் பயன்படுத்தி பல்வேறு கட்டிகள் உருவாவதைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்தும் தன்மைக்கு தொன்றுதொட்டு அறியப்படுகிறது.  

மேலும் படிக்க | புற்றுநோய் குறித்த இந்த விஷயங்கள் தெரியுமா? எச்சரிக்கை விடுக்கும் அறிகுறிகள்!!! 

புற்றுநோய்க்கு அலோபதி சிகிச்சை

அலோபதியில் புற்றுநோய்க்கான சிகிச்சையில் அறுவை சிகிச்சையில், கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை ஆகியவை அடங்கும். இந்த நடைமுறைகள் அனைத்தும் நோயை தரும் வலி மற்றும் வேதனையை விட மிகவும் வேதனையான பக்க விளைவுகளைத் தருபவை. ஆனால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது ஆயுர்வேதம் என்றால், கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆயுர்வேத மருந்துகள்
ஆயுர்வேத மருந்துகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தாமல் சிக்கலான புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க முடியும் என்று மருத்துவர்கள் நம்புகின்றனர். புற்றுநோயைக் கண்டறிய சில பரிசோதனைகள் செய்யப்படுகின்றன, அதன் பிறகு முறையான ஆயுர்வேத சிகிச்சை வழங்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஆயுர்வேத மூலிகைகளுடன் திட்டமிட்ட உணவு முறையும் இணைந்தால் புற்றுநோயாளிகளுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்க முடியும் என்று நம்பப்படுகிறது.

ஆயுர்வேத சிகிச்சையானது புற்றுநோயாளிகளின் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் நச்சுகளை அகற்ற உதவும். இது பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டை பலப்படுத்துவதுடன் அதை மீட்டெடுக்கிறது. ஆயுர்வேத மருந்துகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புற்றுநோய் செல்களை அழிக்கின்றன.

ஆயுர்வேத புற்றுநோய் சிகிச்சை

இந்த வகையில், ஜெய்ப்பூரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆயுர்வேதத்தின் இணைப் பேராசிரியர் டாக்டர் சர்வேஷ் அகர்வால், புற்றுநோய் சிகிச்சைக்கு ஆயுர்வேதத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். "இன்று, புற்றுநோய் என்பது உடல் நிலைக்கு மட்டுமல்ல, சிகிச்சையின் போது நோயாளியின் அறிவாற்றல் ஆரோக்கியத்தையும் சமாளிக்க வேண்டும். புற்றுநோய்க்கு எதிரான போரில் நோயாளியின் மன அழுத்தத்தை குறைப்பது முக்கியம்.

மேலும் படிக்க | மிரட்டும் தொப்பை கொழுப்பை விரட்டி அடிக்கும் சூப்பர் உணவுகள்

ஆயுர்வேதத்தில். புற்றுநோய் சிகிச்சை, உணவு, உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானம் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் நோயாளியின் முழுமையான நல்வாழ்வில் கவனம் செலுத்த முடியும். அலோபதி மற்றும் ஆயுர்வேத சிகிச்சை இரண்டையும் ஒன்றாக தொடரலாமா வேண்டாமா என்பதை மருத்துவர்களே முடிவு செய்யலாம்" என்று டாக்டர் சர்வேஷ் அகர்வால் கருதுகிறார்.

ரசாயன சேர்க்கைகள் நிறைந்த நவீன உணவு, உடலின் வாத பித்த கபம் என்ற முக்குணங்களையும் சீர்குக்லைக்கிறது. புற்றுநோயைத் தடுக்கவும், இந்தியாவில் புற்றுநோயாளிகளின் அதிகரித்து வரும் சுமையைக் குறைக்கவும், ஆயுர்வேதம் மற்றும் யோகா உள்ளிட்ட ஆயுஷ் சிகிச்சைகள் குறித்து அதிக விழிப்புணர்வு வேண்டும்.

புற்றுநோயைத் தடுப்பதில் ஆயுர்வேதம் மற்றும் யோகா உள்ளிட்ட ஆயுர்வேத சிகிச்சைகளின் பயன்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது. இது புற்றுநோயைத் தடுக்க உதவும்

புற்றுநோயும் வாழ்க்கைமுறை காரணிகளும்
புகையிலை, மது மற்றும் உடல் பருமன் ஆகியவை புற்றுநோயின் அதிகரித்து வரும் நிகழ்வுகளுக்கு காரணமாக உள்ளன. காற்று மாசுபாடு புற்றுநோய்க்கான முக்கிய சுற்றுச்சூழல் ஆபத்து காரணியாக உள்ளது.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கர்ப்பம் தரிக்க உதவும் யோகாசனங்கள்! இத்தனை இருக்கிறதா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News