கைசபாத்: இந்திரபுரத்தில் உள்ள ஜி.டி. கோயங்கா பப்ளிக் பள்ளியில் 4 வகுப்பு பயிலும் பத்து வயதான ஆர்மன் சேக்கல், பள்ளி கட்டிடத்தின் இரண்டாம் தளத்தில் இருந்து தவறி விழுந்து இறந்தார்.
ஆர்மன் சேக்கல் உடனடியாக பள்ளி நிர்வகதல் சாந்தி கோபால் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார், ஆனார் அவர் வழயிலே இறந்ததாக அறிவித்தனர்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகம் கூறுகையில், பள்ளி தேர்வு நடந்து கொண்டிருக்கும் போது ஆர்மன் பென்சில் பாக்ஸை வாங்க வெளியே சென்றதாகவும் திரும்பி வருகையில் தவறி விழுந்ததாகவும் தெரிவித்தனர்.
ஆனால் அவரது அன்னை சுவாதி சேக்கல் கூறுகையில், பள்ளியின் அலட்சியத்தி காரணமாகவே தன் மகன் இறந்ததாகவும், சம்பவம் குறித்து எங்களுக்கு பள்ளியில் இருந்து அறிவிக்காமல் மறைத்து விட்டதாகவும் கூறினார். தன மகன் தானாக விழவில்லை எனவும், தளத்தில் தண்ணீர் இருந்ததால் தான் வழுக்கி விழுந்துள்ளார் எனவும் கூறினார். ஆர்மன் விழுந்த இடத்தில CCTV கேமரா இல்லாததால் உண்மையான காரணத்தை கண்டறிய முடியவில்லை எனவும் கூறினார்.
பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்கு பதிந்து விசாரணை செயப்பட்டு வருவதாக கைசபாத் காவல்துறை தெரிவித்தனர்.