மும்பை கமலா மில் தீவிபத்தினை தொடர்ந்து, மரோல் மற்றொரு தீவிபத்து!

மும்பை கமலா மில்-ல் தீவிபத்து ஏற்பட்ட ஒரு வார கால இடைவெளியில் மற்றொரு தீவிபத்து மும்பை பகுதியை உலுக்கியுள்ளது!

Last Updated : Jan 4, 2018, 09:33 AM IST
மும்பை கமலா மில் தீவிபத்தினை தொடர்ந்து, மரோல் மற்றொரு தீவிபத்து! title=

மும்பை கமலா மில்-ல் தீவிபத்து ஏற்பட்ட ஒரு வார கால இடைவெளியில் மற்றொரு தீவிபத்து மும்பை பகுதியை உலுக்கியுள்ளது!

மும்பையின் மரோல் பகுதியில் நேற்று இரவு 1.30 மணியளவில் தீடீர் தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 11 பேர் இந்த தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

மும்பை, கிழக்கு அந்தேரி பகுதியில் ஏற்பட்ட இந்த தீவிபத்து குறித்து தீயனைப்பு வீரர்களுக்கு சுமார் 2.10 மணியளவில் தகவள் கிடைத்துள்ளது, பின்னர் சம்பவயிடத்திற்கு விரைந்த தீயனைப்பு துறையினர் சுமார் 4.20 மணிவரை தீனைப்பு முயற்சியில் ஈடுப்பட்டு தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் மீட்கப்படவர்கள் அனைவரும் அருகில் இருந்த கூப்பர் மற்றும் முகுந்த் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவர்களது நிலவரம் தற்போது அபாய கட்டத்தினை தாண்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் விபத்தில் இரந்தவர்கள் சன்கிட் கப்பாசி, மொஹின் கப்பாசி, தஷ்லீம் கப்பாசி மற்றும் தாவுத் கப்பாசி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

Trending News