தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்!!

தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை குடியரசு தலைவர் நியமித்துள்ளார்!!

Last Updated : Sep 1, 2019, 12:20 PM IST
தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்!! title=

தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை குடியரசு தலைவர் நியமித்துள்ளார்!!

5 மாநிலங்களுக்கு புதிய  ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். கேரளா, மகாராஷ்டிரா ,  இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானாஆகிய 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி தெலுங்கானா மாநிலத்திற்கு தமிழிசை சௌந்தரராஜனும் , கேரள ஆளுநராக இருந்த சதாசிவம் மாற்றப்பட்டு கேரள மாநில ஆளுநராக ஆரிஃப் முகமது கான் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல  இமாச்சல பிரதேச ஆளுநராக இருந்த கல்ராஜ் மிஸ்ரா ராஜஸ்தான் மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் . பண்டாரு தத்தாத்ரே புதிய  இமாச்சல ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மகாராஷ்டிரா மாநில ஆளுநராக  பகத் சிங் கௌஷ்யாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

 

Trending News