இன்று முதல் CBSE 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, வெளியான முக்கிய தகவல்

CBSE 10th-12th Exam 2023: தேர்வு நேரம் காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், மாணவர்கள் காலை 10 மணிக்கு முன் தேர்வு மையத்திற்கு சென்றடைய வேண்டும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 15, 2023, 10:45 AM IST
  • சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பம்.
  • வழிகாட்டு நெறிமுறைகளும் சிபிஎஸ்இ-யால் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • சிபிஎஸ்இ 10ம் வகுப்புகளுக்கான தேர்வு பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி மார்ச் 21 அன்று முடிவடையும்.
இன்று முதல் CBSE 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, வெளியான முக்கிய தகவல் title=

CBSE 10th-12th Exam 2023: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் இன்று முதல் தொடங்குகின்றன. முதல் நாளான இன்று, 10ம் வகுப்பு ஓவிய தேர்வு நடைபெறவிருக்கிறது. அதேபோல் 12 ஆம் வகுப்புக்கு தொழில் முனைவோர் பாடத்தேர்வு இன்று நடக்க உள்ளது.

இருப்பினும் 10 ஆம் வகுப்புக்கான முக்கிய பாடத் தேர்வுகள் பிப்ரவரி 27ம் தேதி துவங்குகிறது. 10 ஆம் வகுப்பின் முதல் முதன்மைத் தேர்வு ஆங்கிலம் முக்கிய பாடமாக இருக்கும். 12ஆம் வகுப்புக்கான முதன்மைத் தேர்வு பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம், 12ம் வகுப்புக்கான ஆங்கில பாடத் தேர்வும் நடைபெறும். மேலும் இரு தரப்பு மாணவர்களுக்கும் காலை 10.30 மணிக்கு தொடங்கி, பகல் 12.30 வரை தேர்வு நடைபெறவுள்ளது. அதேபோல் சில தேர்வுகள் 1.30 மணி வரை நடத்தப்படும் என்றும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மிகப்பெரிய ஒப்பந்தம்.. பிரான்சிடம் இருந்து 250 விமானங்களை வாங்கும் ஏர் இந்தியா

இதனிடையே தேர்வர்கள் அரை மணி நேரத்துக்கு முன்னதாக வரவேண்டும் என்றும், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் படிக்க 15 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என்றும், மேற்கண்ட விதிகளை பின்பற்றி தேர்வு எழுத வேண்டும் என்றும் CBSE தெரிவித்துள்ளது.

இன்று நடைபெறும் 10 ஆம் வகுப்பு ஓவியப் பாடத் தேர்வில் சுமார் 4000 மாணவ, மாணவிகள் பங்கேற்றக்க உள்ளனர். அதேபோல் 12 ஆம் வகுப்பின் தொழில்முனைவு பாடத் தேர்வில் 1643 மாணவர்கள் தோர்வு எழுத்தள்ளனர். ஒட்டுமொத்தமாக 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மட்டும் மொத்தம் 21,86,940 பேர் தேர்வு எழுதுகிறார்கள். மேலும் 12ம் வகுப்பு பொறுத்தவரையில், மொத்தம் 16,96,770 பேர் தேர்வெழுதிகின்றனர்.

இந்த நிலையில் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சில முக்கிய வழிகாட்டுதல்களும் வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இன்று பரீட்சைக்கு வீட்டை விட்டு வெளியேறும் முன் கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டுதல்களையும் மாணவர்கள் படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

CBSE 10th-12th Exam Day Guidelines 2023: தேர்வு நாள் வழிகாட்டுதல்களை இங்கே படிக்கவும்

1. மாணவர்கள் பள்ளி சீருடை மற்றும் ஐ-கார்டு அணிந்து தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும்.
2. மாணவர்கள் காலை 10 மணிக்கு முன்னதாக தேர்வு மையத்தை அடைய வேண்டும்.
3. தேர்வு மையத்திற்கு மாணவர்கள் அனுமதி அட்டை, பால் பேனா மற்றும் பென்சில் ஆகியவற்றை மட்டும் எடுத்துச் செல்ல வேண்டும்.
4. மொபைல் போன், கால்குலேட்டர் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் போன்ற எந்த எலக்ட்ரானிக் கேஜெட்டையும் தேர்வு மையத்திற்கு எடுத்து செல்ல அனுமதி இல்லை.
5. தேர்வு நேரம் முடிந்த பின்னரே மாணவர்கள் தேர்வு மையத்தை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் படிக்க | பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு ராகுல் காந்தியைக் கண்டு மத்திய அரசு பயமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News