கோகுல்புரி மெட்ரோ ரயில் நிலையத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி! 4 பேர் காயம்

Delhi Metro News: கோகுல்புரி மெட்ரோ ரயில் நிலையத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர், இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு. இரண்டு அதிகாரிகள் இடைநீக்கம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 8, 2024, 03:42 PM IST
கோகுல்புரி மெட்ரோ ரயில் நிலையத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி! 4 பேர் காயம் title=

Gokulpuri Metro Station: தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள கோகுல்புரி மெட்ரோ ரயில் நிலைய நடைமேடையின் பக்கவாட்டுச் சுவரின் ஒரு பகுதி இன்று (வியாழக்கிழமை) இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் டெல்லி முழுவதும் பீதியை கிளப்பியுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில், உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார். இறந்தவரின் குடும்பத்திற்கு டெல்லி மெட்ரோ நிர்வாகம் நிவாரணம் அறிவித்துள்ளது. 

இரண்டு அதிகாரிகள் இடைநீக்கம் -டிஎம்ஆர்சி

கோகுல்புரி மெட்ரோ ரயில் நிலையத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது தொடர்பாக இரண்டு அதிகாரிகளை உடனடியாக இடைநீக்கம் செய்ய டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) உத்தரவிட்டு உள்ளது. மேலும் கோகுல்புரி மெட்ரோ ரயில் நிலையத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததற்கான காரணங்கள் குறித்து ஆராயப்படும் எனவும் டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க - மக்களே உஷார்! மெட்ரோ கதவில் சிக்கிய புடவை, பெண்ணின் உயிரைப் பறித்த கொடூரம்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்

கோகுல்புரி மெட்ரோ ரயில் நிலையத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என டிஎம்ஆர்சி அறிவித்தது. மேலும் சிறு காயங்களுக்கு ரூ.1 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க டிஎம்ஆர்சி முடிவு செய்துள்ளது.

கோகுல்புரி மெட்ரோ ரயில் நிலையத்தில் விபத்து

வடகிழக்கு டெல்லியில் உள்ள பிங்க் லைன் வழித்தடத்தில் உள்ள கோகுல்புரி மெட்ரோ ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த விபத்து சம்பவம் காலை 11 மணியளவில் நடைபெற்றுள்ளது. 

உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு -டெல்லி போலீசார்

அப்பகுதி மக்களின் உதவியுடன், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை போலீசார் மீட்டனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காயமடைந்த அனைவரும் ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலிஸ் அதிகாரி தெரிவித்தார். இது தொடர்பாக உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என டெல்லி போலீஸார் தெரிவித்தனர்.

மேலும் படிக்க - எருமை மீது அருமையாக சவாரி செய்த இளைஞர்! ஏன் தெரியுமா? வைரல் வீடியோவை பாருங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News