ஹிஜாப் சர்ச்சை: இந்து இளைஞர் படுகொலை; ஷிவமோகாவில் 144 தடை உத்தரவு அமல்!

கர்நாடகாவின் ஷிவமொகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக பேஸ்புக்கில் பதிவு எழுதியதற்காக 26 வயது இந்து வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 21, 2022, 10:35 AM IST
ஹிஜாப் சர்ச்சை: இந்து இளைஞர் படுகொலை; ஷிவமோகாவில் 144 தடை உத்தரவு அமல்! title=

கர்நாடகா: கர்நாடகாவின் ஷிவமொகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக பேஸ்புக்கில் பதிவு எழுதியதற்காக 26 வயது இந்து வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட இந்து இளைஞர் 26 வயதான ஹர்ஷா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் மாநில பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மதச்சார்பற்ற சீருடைகளுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். குற்றச்சம்பவத்தை கருத்தில் கொண்டு, ஷிவமோகா மாவட்ட நிர்வாகம் 144 பிரிவின் கீழ் தடை உத்தரவை பிறப்பித்து, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர் வலதுசாரி இந்து அமைப்பான பஜ்ரங்தள் அமைப்புடன் தொடர்புடையவர் என்றும் கூறப்படுகிறது. பாரதி காலனியில் உள்ள ரவிவர்மா லேனில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஹர்ஷா இனந்தெரியாத ஆசாமிகளால் குத்திக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ஹிஜாப்: உயர்நிலை பள்ளிகள், கல்லூரிகளுக்கு பிப்ரவரி 16 வரை விடுமுறை

மாநிலத் தலைநகர் பெங்களூருவிலிருந்து 250 கிமீ தொலைவில் உள்ள இந்த நகரத்தில், ஹிஜாப் விவகாரம் காரணமாக சமீபத்தில் பதற்றல் நிலை நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது. 

மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, ஷிவமொக்காவுக்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்தார். காவல்துறைக்கு 'முக்கியமான ஆதாரங்கள்' கிடைத்துள்ளதாகவும், சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களை விரைவில் கைது செய்வதாகவும் அவர் கூறினார். “இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது. காவல்துறைக்கு துப்பு கிடைத்துள்ளது, நிச்சயமாக அவர்கள் (குற்றம் சாட்டப்பட்டவர்கள்) விரைவில் கைது செய்யப்படுவார்கள். மக்கள் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று ஞானேந்திரா செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் படிக்க | Hijab Row: ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு தனி வகுப்பறை - தீவிரமடையும் போராட்டங்கள்!

காவல் துறை துணை ஆணையர் செல்வமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், சிஆர்பிசியின் 144வது பிரிவின் கீழ் நகரில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

“போலீசார் இந்த வழக்கை விசாரித்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளோம் என்றார் செல்வமணி.

இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் பி.எம்.லட்சுமி பிரசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். "அவர்களைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதே எங்கள் முன்னுரிமை. மக்கள் எங்களுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம், உணர்ச்சிவசப்பட்டு செயல்பட வேண்டாம்" என்று பிரசாத் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் படிக்க | ஹிஜாப் சர்ச்சை: 3 நாட்களுக்கு அனைத்து பள்ளி, கல்லூரிகளை மூட கர்நாடக முதல்வர் உத்தரவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News