கிண்டர் கார்டன் ஆன்லைன் வகுப்பில் கர்ஜிக்கும் புலிகள்… அசத்தும் கேரள ஆசிரியர்..!!

கிண்டர்கார்டன் ஆன்லைன் வகுப்பில் திடீரென புலிகள், யானைகள் தோன்றுகின்றன.  மரங்கள் முளைக்கின்றன. இதனால், குழந்தைகள் குதூகலிக்கின்றனர்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 13, 2020, 01:46 PM IST
  • வகுப்பிற்கு இடையில் தோன்றும் யானைகள், புலிகள் குழந்தைகளை பெரிதும் ஈர்த்துள்ளது.
  • AEM AUP பள்ளியில் பணியாற்றும் சமூக அறிவியல் ஆசிரியரான ஷியாம் வெங்களூர், இதனை சாதித்துள்ளார்
  • ஜூன் 1ம் தேதி பள்ளிக் குழந்தைகளுக்காக “ஃப்ர்ஸ்ட் பெல்” என்ற பெயருடன் ஆன்லைன் வகுப்புகளை கேரள மாநிலம் தொடங்கியது
கிண்டர் கார்டன் ஆன்லைன் வகுப்பில் கர்ஜிக்கும் புலிகள்… அசத்தும் கேரள ஆசிரியர்..!! title=

கிண்டர்கார்டன் ஆன்லைன் வகுப்பில் திடீரென புலிகள், யானைகள் ஆகியவை தோன்றுகின்றன. தீடீரென்று மரங்கள் முளைக்கின்றன. இதனால், குழந்தைகள் குதூகலிக்கின்றனர்.  கேரளா ஆசிரியரின் புதுமை முயற்சியினால் இது சாத்தியமாகியுள்ளது.

கொரோனா தொற்று பரவிவரும் காரணமாக ஆன்லைன் வகுப்பு தவிர்க்க முடியாததாகிவிட்டது.

சாதாரண முறையில் பள்ளியில் நடக்கும் வகுப்பில் குழந்தைகளை எளிதாக கட்டுப்பாட்டிற்குள் வைக்கலாம். ஆனால் ஆன்லைன் அது சிரமமான காரியம் தான்.

குழந்தைகளுக்கு மிக எளிதில் கவனச்சிதறல் ஏற்படுகிறது.

இந்தப் பிரச்சினையை தீர்க்க கேரளாவின் மல்லபுரத்தை சேர்ந்த ஒரு ஆசிரியர் ஒரு புதுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

ஆக்குமெண்டெட் ரியாலிட்டி என்று அழைக்கப்படும் மெய்நிகர் தோற்றத்தை ஏற்படுத்த அவர் தொழில்நுட்பத்தின் உதவியை நாடியுள்ளார்.

AEM AUP பள்ளியில் பணியாற்றும் சமூக அறிவியல் ஆசிரியரான ஷியாம் வெங்களூர், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வகுப்பறையில் மெய்நிகர் தோற்றங்களை ஏற்படுத்தி குழந்தைகளுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளார்.

ALSO READ | பின் தூங்கி பின் எழும் பழக்கம் உள்ளவரா…. ஆஸ்துமா, அலர்ஜி வரும் ஜாக்கிரதை..!!!

கிண்டர்கார்டன் வகுப்பில், ஆசியருக்கு அருகில், மெய்நிகர் தோற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இதனால் குழந்தைகள் உற்சாகத்துடன் ஆன்லைன் வகுப்பில் கவனமாக பாடங்களை கவனிக்கிறார்கள்.

ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய ஷியாம் வெங்களூர், இந்த முயற்சியை செயல்படுத்த அவருக்கு இரண்டு மாதங்கள் ஆனது என்றும் குழந்தைகளுக்கு போரடிக்காமல், வகுப்பில் ஆர்வமுடன் கவனிக்க ஊக்குவிக்க வேண்டும் இருப்பதற்காக இந்த முயற்சியை தான் மேற்கொண்டதாகவும் கூறினார்.

இப்போது கேரளாவில் உள்ள பல பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் ஷ்யாம் வெங்களூரின் உதவியை நாடுகின்றனர்

கிரீன் ஸ்கிரீன்,GIF எனப்படும் கிராஃபிக்ஸ் இன்டர்சேன்ஞ் ஃபார்மட் இமேஜ்கள், பல்வேறு செயலிகள் ஆகியவற்றின் தொழில்நுட்பங்களின் உதவியுடன், வகுப்புகளில் மெய்நிகர் தோற்றங்களையும், அதற்கேற்ற ஆடியோ களையும் இணைத்து அவர் இதை சாதித்துள்ளார்.

ALSO READ | நம் சித்தர்கள் தந்த அற்புத யுக்தி..... கொரோனாவை துரத்தும் ஆற்றல் மிக்க சக்தி...!!!

 

வகுப்பிற்கு இடையில் தோன்றும் புலிகளையும் யானைகளையும் அதன் கர்ஜனை களையும் கேட்டு குழந்தைகள் குதூகலிக்கின்றனர்

முன்னதாக ஜூன் 1ம் தேதி பள்ளிக் குழந்தைகளுக்காக “ஃப்ர்ஸ்ட் பெல்” என்ற பெயருடன் ஆன்லைன் வகுப்புகளை கேரள மாநிலம் தொடங்கியது.  ஆன்லைன் யூடியூப் சேனல் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என்று கேரளாவின் கல்விக்கான கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப அமைப்பு கூறியது குறிப்பிடத்தக்கது.

Trending News