RSS-ன் இந்து மதத்தை நம்ப மாட்டோம் BJP-க்கு எதிராக யுத்தம் செய்வோம்: மம்தா பானர்ஜி

காவிக்கட்சி"யில் சேருமாறு அழுத்தம் கொடுக்கிறார்கள். பாஜகவுக்கு அரசியல் நாகரீகம் தெரியாது. அந்த கட்சிக்கு சித்தாந்தம் இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 16, 2020, 06:49 PM IST
  • பாஜகவுக்கு அரசியல் நாகரீகம் தெரியாது. சித்தாந்தம் இல்லை.
  • ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கீழ் இருக்கும் இந்து மதத்தை நம்பவில்லை.
  • நாங்கள் யாருக்கும் தலைவணங்கப் போவதில்லை: முதல்வர் மம்தா பானர்ஜி.
RSS-ன் இந்து மதத்தை நம்ப மாட்டோம் BJP-க்கு எதிராக யுத்தம் செய்வோம்: மம்தா பானர்ஜி title=

புதுடெல்லி: சமீபத்திய நாட்களிகளில் மேற்கு வங்காள அரசியலில் ஒரு பெரிய குழப்பம் நிலவி வருகிறது. அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பாரதிய ஜனதா (BJP) ஆகியவற்றில் மேற்கு வங்க அரசியல் சிக்கியுள்ளது. கடந்த காலங்களில், பாரதிய ஜனதாவை தாக்கி வந்த மம்தா, தற்போது ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் (RSS) அமைப்பை குறிவைத்து ஒரு பெரிய அறிக்கையை தந்துள்ளார். 

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இந்து மதம் நம்பவில்லை:

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (Mamata Banerjee), "நாங்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கீழ் இருக்கும் இந்து மதத்தை நம்பவில்லை. நாங்கள் யாருக்கும் தலைவணங்கப் போவதில்லை" என்று கூறியுள்ளார். மேற்கு வங்காளத்தின் கோச்னரில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய மம்தா இந்த செய்தியை வழங்கியுள்ளார். நாங்கள் பாரதீய ஜனதாவுடன் சமாதானப் போரை நடத்துவோம், யாருடைய கொடூரத்தையும் இங்கு இயக்க விடமாட்டோம் என்றும் கூறினார்.

ALSO READ | அரசியல் வன்முறைத் தொழில் செழித்து வளர்ந்து வரும் மாநிலம் வங்காளம் மட்டுமே: ஷா

பாஜகவின் எதிர் தாக்குதல்:

மறுபுறம், மம்தா பானர்ஜியின் கூற்றுக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. மூத்த தலைவர் கைலாஷ் விஜயவர்கியா (Kailash Vijayvargiya) கூறுகையில், "மம்தா பானர்ஜி தலைமையில் மேற்கு வங்காளத்தில் தேர்தல் பயம் மற்றும் பயங்கரவாத சூழல் இருக்கிறது. ஜனாதிபதியின் ஆட்சி வங்காளத்தில் அமல் செய்ய வேண்டும், இல்லையெனில் மேற்கு வங்காளத்தில் அச்சமின்றி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும், அதற்கு தேர்தல் ஆணையம் பொறுப்பேற்க வேண்டும். தேர்தல் நடத்தும் போது, மாநில அரசின் அதிகாரிகளை பயன்படுத்தக்கூடாது. மத்திய அரசின் அதிகாரிகளை பயன்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

 

பாஜகவுக்கு அரசியல் நாகரீகம் தெரியாது: மம்தா

திரிணாமுல் காங்கிரஸ் (Trinamool Congress) தலைவர்களை "காவி கட்சியில்" சேர நிர்பந்திக்கப் படுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜக மீது குற்றம் சாட்டியுள்ளார். கூச் பெஹாரில் நடந்த பேரணியில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, கட்சியை விட்டு வெளியேறுபவர்களை "சந்தர்ப்பவாதிகள்" என்று குறிப்பிட்டு, திரிணாமுல் காங்கிரஸைப் பிளவுபடுத்த பாஜக "பணப் பைகள்" பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார். 

ALSO READ |  இந்து மத குருக்களுக்கான உதவித்தொகை திட்டத்தை அறிவித்தார் CM

பாஜக தலைவர்களின் தைரியத்தைப் பாருங்கள் அவர்கள் எங்கள் மாநிலத் தலைவர் சுப்ரதா பக்ஷியை "காவிக்கட்சி"யில் (Saffron Party) சேருமாறு அழுத்தம் கொடுக்கிறார்கள். பாஜகவுக்கு அரசியல் நாகரீகம் தெரியாது. அந்த கட்சிக்கு சித்தாந்தம் இல்லை. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒன்று அல்லது இரண்டு சந்தர்ப்பவாதிகள் பிஜேபி நலனுக்காக உழைத்து வருகின்றனர் எனவும் மம்தா கூறினார்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News