வங்கதேச சுதந்திர போராட்டம் எனது வாழ்நாளின் முதல் போராட்டம்: பிரதமர் மோடி

கொரோனா வைரஸ் ( Corona Virus) பரவல் தொடங்கியதிலிருந்து எந்த வெளிநாட்டுக்கும் பயணிக்காத பிரதமர் மோடி, 15 மாதங்களுக்குப் பின் வங்க தேச பயணம் மேற்கொண்டுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 26, 2021, 09:14 PM IST
  • ஷேக் முஜிபூர் ரகுமான் வங்கதேச மக்களுக்காகவே அவர் தனது உயிரை தியாகம் செய்தார்.
  • வங்கதேசத்தில் பாகிஸ்தான் அரங்கேற்றிய அட்டூழியங்கள் பற்றி எனக்கு மிக நன்றாக தெரியும்.
  • 1971-ல் பிரதமராக இருந்த இந்திராகாந்தியின் முயற்சியும் நாம் அனைவரும் அறிந்ததே.
வங்கதேச சுதந்திர போராட்டம் எனது வாழ்நாளின் முதல் போராட்டம்:  பிரதமர் மோடி title=

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, தனது நாட்டின் சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு   (PM Narendra Modi) விடுத்த அழைப்பினை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று காலை தில்லியில் இருந்து வங்கதேசத்துக்கு புறப்பட்டு சென்றார்.

கொரோனா வைரஸ் ( Corona Virus) பரவல் தொடங்கியதிலிருந்து எந்த வெளிநாட்டுக்கும் பயணிக்காத பிரதமர் மோடி, 15 மாதங்களுக்குப் பின் வங்க தேச பயணம் மேற்கொண்டுள்ளார். குடியரசுத் தலைவர், பிரதமர் பயணிப்பதற்காக  வாங்கப்பட்ட போயிங் 777 விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு சென்றார். 

பிரதமர் நரேந்திர மோடி வங்கதேசத்தின் சுதந்திரத்துக்காக போராடிய இந்திய ராணுவத்தினருக்கு  அஞ்சலி செலுத்தினார். 

ALSO READ | சூயஸ் கால்வாயில் சிக்கிய பிரம்மாண்ட கப்பலால் உலக வர்த்தகம் ஸ்தம்பிக்கும் அபாயம்

வங்கதேசத்தின் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, “ ஷேக் முஜிபூர் ரகுமான் வங்கதேச மக்களுக்காகவே அவர் தனது உயிரை தியாகம் செய்தார். காந்தி விருதை இந்தியா அவருக்கு வழங்குவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. வங்கதேசத்தின் சுதந்திரத்துக்காக போராடிய இந்திய ராணுவத்தினருக்கு எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்தி அவர்களை நினைவு கூறுகிறேன். வங்க தேச சுதந்திர போராட்டத்தின் போது எனக்கு 20 - 22 வயது இருக்கும் என்னுடைய நண்பர்களுடன் வங்கதேச சுதந்திரத்துக்கு ஆதரவாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டேன். அந்த போராட்டத்தின் போது நான் சிறைக்கு சென்றேன். வங்கதேசத்தில் பாகிஸ்தான் அரங்கேற்றிய அட்டூழியங்கள் பற்றி எனக்கு மிக நன்றாக தெரியும். அந்த புகைப்படங்களை பார்த்த எனக்கு தூக்கம் வரவில்லை.” என்றார். 

மேலும் உரையாற்றிய அவர், “ஷேக் முஜிபூர் ரகுமான் வங்க தேசத்தின் நம்பிக்கை கதிர். எந்த ஒரு நாடும் வங்கதேசத்தை அடிமைப்படுத்த முடியாது என்பதை உறுதி செய்தார். 1971-ல் பிரதமராக இருந்த இந்திராகாந்தியின் முயற்சியும் நாம் அனைவரும் அறிந்ததே. மேட் இன் இந்தியா தடுப்பூசிகள் வங்கதேசத்திற்கு அனுப்பி, அதனால் மக்கள் பயனடைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்’ என்றார்.

ALSO READ | வங்க தேசம் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News