ராகுல் காந்தியின் வரவு காங்கிரஸ் கட்சிக்கு புதிய உயர்வாகும்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்!

காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தி சிறப்பாக வழி நடத்துவார் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

Last Updated : Dec 16, 2017, 03:41 PM IST
ராகுல் காந்தியின் வரவு காங்கிரஸ் கட்சிக்கு புதிய உயர்வாகும்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்! title=

நேரு குடும்பத்தின் 6-ஆவது காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் தற்போது காங்கிரஸ் கட்சியின் 87-ஆவது தலைவராவார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, மூத்த காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் முன்னிலையில் இவருக்கு பதவி பிரமாணம் நடைபெற்றது.

இதில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்று ராகுல்காந்திக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்:- காங்கிரசின் வரலாற்றில் இன்று முக்கியமான நாள் இது உணர்ச்சிமிக்க தருணமாக உள்ளது. சோனியா 19 வருடங்களாக கட்சியை சிறப்பாக வழி நடத்தினார். சோனியாவின் வழிகாட்டுதலின் பேரில் காங்கிரஸ் 10ஆண்டுகள் சிறப்பான ஆட்சியைத் தந்தது. 

அதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியை ராகுல் சிறப்பாக வழி நடத்துவார். இதன் மூலம் காங்கிரஸ் புதிய உயரத்தை அடையும் என்று தெரிவித்துக்கொண்டார்.

 

Trending News