Viral Video: கவனமா இருங்க பெற்றோர்களே... குழந்தைக்கு நடந்த ஷாக் சம்பவம்!

Shocking Viral Video: ஒரு பிளே-ஸ்கூலில் இருக்கும் குழந்தைகள் கவனிக்கப்படாமல் இருக்க, ஒரு குழந்தை அங்கிருக்கும் மற்றொரு குழந்தையை திரும்பத் திரும்ப அடிக்கும் சிசிடிவி வீடியோ வைரலாகி வருகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Jun 24, 2023, 06:11 PM IST
  • இந்த வீடியோ ட்விட்டரில் முதலில் பகிரப்பட்டது.
  • அந்த வகுப்பறையில் குழந்தைகளை கவனிக்க ஆட்களில்லை.
  • இந்த வீடியோவை கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
Viral Video: கவனமா இருங்க பெற்றோர்களே... குழந்தைக்கு நடந்த ஷாக் சம்பவம்! title=

Shocking Viral Video: முன்பெல்லாம் குழந்தைகளை மூன்று வயதில் இருந்து வயதிற்குள் இருக்கும்போது தான் அங்கன்வாடிக்கோ அல்லது பள்ளிக்கோ பெற்றோர்கள் அனுப்புவார்கள். ஆனால், தற்போது இரண்டு வயதில் இருந்தே பிளே-ஸ்கூல் எனப்படும் சிறார்களுக்கான பள்ளிகளில் தங்களின் பிள்ளைகளை பெற்றோர்கள் சேர்க்கின்றனர். 

கூட்டுக் குடும்பங்களின் சிதைவு, பெற்றோர்களுக்கான வேலைப்பளு, நவீன காலத்தின் பல்வேறு கூறுகள் என காரணிகள் குழந்தைகள் சிறு வயதிலேயே பெற்றோர்கள் அல்லாதவர்களின் கவனிப்பில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். இந்தியாவில் இந்த போக்கு, சென்னை, பெங்களூரு போன்று பெருநகரங்களில் பரவலாக காணப்படுகிறது.  

அந்த வகையில், அதேபோன்ற ஒரு பிளே-ஸ்கூலில் இருக்கும் குழந்தைகள் கவனிக்கப்படாமல் இருக்க, ஒரு குழந்தை அங்கிருக்கும் மற்றொரு குழந்தையை திரும்பத் திரும்ப அடிக்கும் சிசிடிவி வீடியோ சில நாள்களாக வைரலாகி வருகிறது. சுமார் ஒரு நிமடத்திற்கு மேல் உள்ள அந்த சிசிடிவி வீடியோவில் குழந்தைகளை கவனிக்க ஆளே இல்லாத அந்த வகுப்பறையில், ஒரு குழந்தை மற்றொரு குழந்தையை அடுத்தடுத்து தொடர்ந்து அடித்தும், கடித்தும் வைப்பது பதிவாகியுள்ளது. 

மேலும் படிக்க | திருப்பதி மலைப்பாதையில் பக்தர்களை அச்சுறுத்திய சிறுத்தை பிடிபட்டது!

இந்த வீடியோ மீது நடவடிக்கை எடுப்பதாக பெங்களூரு காவல்துறை உறுதியளித்துள்ளது. இச்சம்பவம் பதிவான சிசிடிவி காட்சிகள் வைரலாகி, பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், ஒரு அறைக்குள் சின்னஞ்சிறு குழந்தைகள் குழு ஒன்று பொம்மைகள் மற்றும் பிற விளையாட்டுப் பொருட்களுடன் சிதறிக் கிடப்பதைக் காணலாம்.  நீல நிற புடவை அணிந்த ஒரு பெண் கதவு அருகே நிற்பதைக் காணலாம். வீடியோவில் சில நொடிகளில், பெண் குழந்தைகளில் ஒருவரை அறைக்கு வெளியே அழைத்துச் செல்கிறார். மீதமுள்ளவர்களை உள்ளே கவனிக்காமல் விட்டுவிட்டு செல்கிறார்.

பின்னர், அறையில் உள்ள குழந்தைகளில் ஒருவர் மற்றொரு குழந்தையை அடிக்கத் தொடங்குகிறார். பெரியவர்களின் தலையீடு இல்லாமல் இது சில நிமிடங்களுக்கு தொடர்கிறது. இந்த வீடியோவை சிட்டிசன்ஸ் மூவ்மென்ட் ஈஸ்ட் பெங்களூரு என்ற ட்விட்டர் கணக்கு பகிர்ந்துள்ளது. அது, பெங்களூருவின் சிக்கலசந்திராவில் உள்ள டெண்டர்ஃபுட் பிளே-ஸ்கூல் என குறிப்பிட்டுள்ளது.

"குழந்தைகள் மூடிய அறையில் கவனிக்கப்படாமல் இருக்கும் பிளே-ஸ்கூலின் கவலையளிக்கும் வீடியோ எங்களுக்கு கிடைத்தது. ஒரு மூத்த குழந்தை ஜூனியர் பள்ளியைத் திரும்பத் திரும்ப அடிப்பதைப் பார்க்கிறது. பள்ளியின் பெயர் டெண்டர்ஃபுட், சிக்கலசந்திரா, பெங்களூரு- 560061. உங்கள் குழந்தையை அங்கு அனுப்ப வேண்டாம். !" என அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | H1B விசாவைப் புதுப்பிக்க வெளிநாடு செல்ல வேண்டாம்! இந்தியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன பிரதமர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News