பஞ்சாபில் கள்ளச் சாராயம் அருந்தி இதுவரை 49 பேர் பலி; பெரும்பாலோர் ஏழை தொழிலாளர்கள்

பஞ்சாபின் மூன்று மாவட்டங்களில் விஷ மது அருந்தியதால் இறந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 42 பேர் இறந்துள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 31, 2020, 10:12 PM IST
பஞ்சாபில் கள்ளச் சாராயம் அருந்தி இதுவரை 49 பேர் பலி; பெரும்பாலோர் ஏழை தொழிலாளர்கள் title=

சண்டிகர்: பஞ்சாபின் பல மாவட்டங்களில் கள்ளச் சாராயம் அருந்தியதால் இறப்பவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்கள் டார்ன் தரன், அமிர்தசரஸ் (Amritsar) மற்றும் படாலா பகுதிகளைச் சேர்ந்தவர்கள். முன்னதாக ஏழு பேர் இறந்தனர். இன்று மேலும் 42 பேர் இறந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் (Amarinder Singh) உத்தரவிட்டுள்ளார். 

வியாழக்கிழமை இறந்த 5 பேரின் உடலை உறவினர்கள் போலீசாருக்கு அறிவிக்காமல் இறுதி தகனம் செய்தனர். தரன் தரனில் அதிகபட்சம் 30 பேரும், படாலாவில் எட்டு பேரும், அமிர்தசரஸில் நான்கு பேரும் இறந்தனர்.

பஞ்சாபில் ஊரடங்கு அமலில் உள்ளதால், சட்டவிரோத மதுபானம் விற்பனை கரணமாக டார்ன் தரன், அமிர்தசரஸ் மற்றும் குர்தாஸ்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை விஷம் கலந்த மதுபானம் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். டார்ன் தரனில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் 30, எட்டு படாலாவில் (குர்தாஸ்பூர்) மற்றும் நான்கு அமிர்தசரஸில் இறந்தன. அமிர்தசரஸில் வியாழக்கிழமை ஏழு பேர் உயிரிழந்தனர். 

ALSO READ | இனி வீடு தேடி வரும் மதுபானம்.... ஆல்கஹால் டோர் டெலிவரி செய்யும் அமேசான்...!

இந்த வகையில், மூன்று மாவட்டங்களில் உள்ள 10 கிராமம் மற்றும் இரண்டு நகர்ப்புற பகுதி என கடந்த 2 நாட்களில் 47 பேர் இறந்துள்ளனர். பலரின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. கள்ளச் சாராயம் காரணமாக இறந்தவர்களில் பெரும்பாலோர் தொழிலாளர்கள் என்பது வேதனைக்குரியது.

அதே நேரத்தில், இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த ஜலந்தர் பிரதேச ஆணையாளருக்கு முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணையில் அந்தந்த மாவட்டங்களின் கூட்டு கலால் மற்றும் வரிவிதிப்பு ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளரும் ஈடுபடுவார்கள். மறுபுறம், பஞ்சாப் காவல்துறை டிஜிபி டிங்கர் குப்தா கூறுகையில், முதற்கட்ட விசாரணையின் போது அனைவரும் கள்ளச் சாராயம் அருந்தியதால் இறந்துவிட்டதாக தெரியவந்துள்ளது எனக் கூறினார்.

ALSO READ |  மதுவை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என சட்டசபையில் கோரிக்கை

பல சட்டவிரோத மதுபானங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையில் மூன்று மாவட்டங்களில் நடந்த சம்பவங்களுக்கு எந்த தொடர்பும் தெரியவில்லை, பல கிராமங்களில் ஒன்றாக விஷம் கலந்த மதுவை அருந்தியதால் பல மரணங்களுக்கு வழிவகுத்தன. எந்த வேதிப்பொருள் மது தயாரிப்பதில் பயன்படுத்தப்பட்டன, அவற்றின் பொருட்கள் எங்கிருந்து வந்தன, இந்த உண்மைகள் அனைத்தும் ஆராயப்படுகின்றன எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Trending News