காசி விஸ்வநாதர் ஆலயத்தின் மறைக்கப்பட்ட உண்மைகள்... வழக்கு விபரங்கள்..!!!

காசி விஸ்வநாதர் கோயிலுக்கும், ஞானவபி மசூதிக்கும் இடையிலான சர்ச்சையை விசாரித்த ஒரு வாரணாசி நீதிமன்றத்தில், 351 ஆண்டுகள் கால உண்மைகளை விவரிக்கும் சில வரலாற்று சிறப்பு மிக்க முக்கியமான ஆவணங்களை இந்து தரப்பினர் சமர்ப்பித்தனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 2, 2020, 10:23 AM IST
  • 1669 ஆம் ஆண்டில் கோயில் முற்றிலுமாக அழிக்கப்பட்டு அரங்கசீப்பின் உத்தரவின் பேரில் அங்கு ஒரு மசூதி கட்டப்பட்டது
  • 1780 ஆம் ஆண்டில், மால்வாவின் ராணி அகிலியாபாய் ஹோல்கர் கியான்வாபி வளாகத்திற்கு அடுத்ததாக, அருகில் ஒரு புதிய கோவிலைக் கட்டினார். புதிய வளாகம் தான் இப்போது காசி விஸ்வநாதர் கோயில் என்று அழைக்கப்படுகிறது.
  • 1853 ஆம் ஆண்டில், பஞ்சாபின் ரஞ்சித் சிங் கோயிலின் கோபுரத்தை அலங்கரிப்பதற்காக 880 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கினார்.
காசி விஸ்வநாதர் ஆலயத்தின் மறைக்கப்பட்ட உண்மைகள்... வழக்கு விபரங்கள்..!!! title=

புதுடில்லி:  500 ஆண்டுகள் நீண்ட காத்திருப்புக்கு பிறகு அயோத்தியில் ராம் கோயிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாத் கோயில் விஷயத்தில் எப்போது தீர்வு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

12 ஜோதிலிங்ககளின் ஒன்றான, காசியில் உள்ள ஜோதிர்லிங்கம், அது ஏற்கனவே இருந்த இடத்தில் நிறுவுவதற்கான சட்ட முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.  ஞான்வபி (Gyanvapi ) என்றால் அறிவின் கிணறு அல்லது குளம் என்று பொருள்

காசி விஸ்வநாதர் ஆலயம் தொடர்பாக மக்களிடமிருந்து வேண்டுமென்றே மறைக்கப்பட்ட  உண்மைகள் : 

காசி விஸ்வநாதர் கோயிலுக்கும், ஞான வாபி மசூதிக்கும் இடையிலான சர்ச்சையை விசாரித்த ஒரு வாரணாசி நீதிமன்றத்தில், 351 ஆண்டுகள் கால உண்மைகளை விவரிக்கும் சில வரலாற்று சிறப்பு மிக்க முக்கியமான ஆவணங்களை இந்து தரப்பினர் சமர்ப்பித்தனர்.

1. 1669 ஏப்ரல் 18 ஆம் தேதி அவுரங்கசீப்பின் ஒரு ஆலோசகரால் வெளியிடப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணம் இது. முதலில் பாரசீக மொழியில் எழுதப்பட்டது. அதில் முல்தான் மற்றும் பனாரஸின் சில புறநகர்ப்பகுதிகளில், சில பிராமணர்கள் தங்கள் குப்பை புத்தகங்களை பள்ளிகளில் கற்பிக்கிறார்கள்  என்று  செய்தி அவுரங்கசீப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2. இதைக் கேட்ட அவுரங்கசீப், காஃபிர்களின் கோயில்களையும் பள்ளிகளையும் இடிக்க வேண்டும் என்று ஒரு ஆணையை வெளியிட்டார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேதம் மற்றும் சிலை வழிபாடு தொடர்பான அனைத்து வகையான நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. 

3.1669 செப்டம்பர் 2 ஆம் தேதி,  காசி விஸ்வநாதர் கோயில் இடிக்கப்பட்டது என்றும் அவுரங்கசீப்பின் உத்தரவு நிறைவேற்றப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டது.

4. அரங்கசீப்பின் உத்தரவின் பேரில் காசி விஸ்வநாதர் கோயில் சேதமடைந்தது என்பதை இந்த வரலாற்று ஆவணம் உறுதிப்படுத்துகிறது. 

5. காசி விஸ்வநாதர் கோயில் சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகும், எனவே இது இந்து மதத்தின் மிக முக்கிய கோவிலாக கருதப்படுகிறது.

6.  இந்தியாவின் மீது முஸ்லிம்கள் படைஎடுப்பு தொடங்கியதும், காசி விஸ்வநாதர் மீதான  தாக்குதலும் தொடங்கியது. முதல் தாக்குதல் 11 ஆம் நூற்றாண்டில் குதுபுதீன் ஐபக் என்பவரால் செய்யப்பட்டது. கோயிலின் சில பகுதி உடைக்கப்பட்டது, ஆனால் தாக்குதல் நடந்தாலும் சிவபெருமானை வழிபாடு தொடர்ந்தது.

7. காசி விஸ்வநாதர் கோயில் 1585 ஆம் ஆண்டில் தோடர்மால் (Todarmal) மன்னரால் புனரமைக்கப்பட்டது. முகலாய பேரரசர் அக்பரின் நவரத்தினங்களில் ஒருவராக இருந்தார். அவர் நிதி துறையில் இருந்தார்

8. 1669 ஆம் ஆண்டில் கோயில் முற்றிலுமாக அழிக்கப்பட்டு அவுரங்கசீப்பின் உத்தரவின் பேரில் அங்கு ஒரு மசூதி கட்டப்பட்டது.

9. 1780 ஆம் ஆண்டில், மால்வாவின் ராணி அகிலியாபாய் ஹோல்கர் கியான்வாபி வளாகத்திற்கு அடுத்ததாக, அருகில் ஒரு புதிய கோவிலைக் கட்டினார். புதிய வளாகம் தான் இப்போது காசி விஸ்வநாதர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. 1853 ஆம் ஆண்டில், பஞ்சாபின் ரஞ்சித் சிங் கோயிலின்  கோபுரத்தை அலங்கரிப்பதற்காக 880 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கினார்.

மேலும் படிக்க | #AyodhyaKeBaadKashi: மோட்சத்திற்கு வழிகாட்டும் நகரில் 'சிவனுக்கே அநீதியா?'

அப்போதிருந்து, இந்த சர்ச்சை தொடர்கிறது, இப்போது இந்த வழக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த சர்ச்சைக்கு தீர்வு காண 2018 ஆம் ஆண்டில், கியான்வாபி வளாகம் முழுவதையும் தொல்பொருள் துறை ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்து தரப்பு கோரியது.

காசி விஸ்வநாதர்  ஆலயத்தின் சுயம்பு ஜோதிர்லிங்கம் ஞான்வபி வளாகத்தில் இருப்பதாக இந்துக்கள் நம்புகிறார்கள். அதனால், அந்த வளாகத்தை அகழ்வாராய்ச்சி செய்ய விரும்புகிறார்கள். அதே நேரத்தில் முஸ்லிம்கள் அந்த இடத்தில் கோயில் இல்லை என மறுக்கின்றனர்

இந்துக்கள் 1991 இல் 3 முக்கிய கோரிக்கைகளை வைத்து ஒரு வழக்கைத் தாக்கல் செய்தனர்.

1. முதல் கோரிக்கை, ஞான்வாபி நிலம் கோயிலின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட வேண்டும்.
2. இரண்டாவது கோரிக்கை, தற்போதைய கட்டமைப்பு இடிக்கப்பட்டு இந்துக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
3. மூன்றாவது கோரிக்கை என்னவென்றால், சுயம்புவாக உள்ள சிவலிங்கம் உள்ள இடத்தில் கோவிலை புனரமைக்க அனுமதிக்க வேண்டும். முஸ்லிம்கள் அதை தடுக்கக்கூடாது.

செப்டம்பர் 23, 1998 அன்று, ஞான்வபி வளாகத்தின் எந்த மதத்திற்கு சொந்தமாக இருந்தது என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும் என்று வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. அதாவது  1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்த இடம் ஒரு கோவிலால அல்லது மசூதியாக இருந்ததா என்பதை தீர்மானிக்க நடவடிக்கை வேண்டும். ஏனென்றால், வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 இன் படி, அயோத்தியை தவிர, பிற வழிபாட்டி தலங்கள் அனைத்தும், ஆகஸ்ட் 15, 1947 ம் தேதி இருந்த நிலை பராமரிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பாபர் மசூதி இடிப்பில் பாகிஸ்தான் சதி இருந்ததா.. தீர்ப்பின் முக்கிய அம்சம் கூறுவது என்ன ..!!!

இருப்பினும், உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிமன்ற தீர்ப்புக்கு தடை உத்தரவு பிறப்பித்தது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு, 2018 ஆம் ஆண்டில் மீண்டும் விசாரணை தொடங்கியது. ஆனால் முஸ்லீம் தரப்பு மீண்டும்,  தடை உத்தரவை பெற்றது.

இந்து தரப்பின் மிகப்பெரிய வாதம் மசூதியின் மற்ற சுவர்களில் இருந்து வேறுபடும் கியான்வாபி மசூதியின் சுவர்களை ஆதாரமாக காட்டியுள்ளது ஞான்வபி வளாகத்தின் பல புகைப்படங்கள் ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

சுதந்திர நாளில் சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் அல்லது மசூதி உள்ளதா என்பதை வாரணாசி மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் முதலில் தீர்மானிக்க விரும்பினர். காசிவிஸ்வநாத் கோயிலுக்கு ஒரு பழங்கால வரலாறு இருப்பதாகவும், இது மக்களின் மத உணர்வுகளுடன் தொடர்புடையது என்றும் நீதிமன்றம் நம்பியது. எனவே இந்த சர்ச்சை விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என கூறியது.

குறிப்பாக, வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் வழக்கில் மூன்று தரப்பினர் உள்ளனர். முதல் தரப்பு ஜோதிர்லிங்கமாக உள்ள சிவன், அதாவது, அயோத்தி வழக்கில் ராம்லல்லா அதாவது குழந்தை ராமர் போல், இங்கு சிவ பெருமான். சிவபெருமானின் நண்பராக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் விஜய் சங்கர் ரஸ்தோகி சிவன் சார்பாக வாதிடுகிறார். இரண்டாவது கட்சி சுன்னி மத்திய வக்ஃப் வாரியம், மூன்றாம் தரப்பு அஞ்சுமான் இன்டெஜாமியா மசாஜித் குழு.

தற்போதைய வழக்கு 1991 இல் தொடங்கப்பட்ட போதிலும், இது திடர்பாக சட்ட பிரச்சனை 1936 ஆம் ஆண்டு தொடங்கியது. அப்போது முஸ்லீம் தரப்பு வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. தீன் முகமது என்பவர் தாக்கல் செய்த அந்த மனுவில், முழு ஞான்வாபி வளாகத்தையும் மசூதி நிலமாக அறிவிக்க நீதிமன்றத்தில் கோரப்பட்டது. 1937 ஆம் ஆண்டில், நீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்தது. ஆனால் சர்ச்சைக்குரிய இடத்தில் தொழுகை நடத்த அனுமதித்தது.

இந்த வழக்கில் இந்துக்கள் ஒரு கட்சியாக வாதிடவில்லை என்றாலும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகள் இன்னும் இந்த வழக்கின் முக்கிய ஆவணங்களாக உள்ளன.

இந்த வழக்கு விசாரணையின் போது, ​​பிரிட்டிஷ் அதிகாரிகள் 1585 இல் கட்டப்பட்ட பண்டைய விஸ்வநாதர் கோயிலின் வரைபடத்தை முன்வைத்தனர். வரைபடத்தை நீதிமன்றத்தில் முன்வைத்து, பிரிட்டிஷ் அதிகாரிகள் அதன் ஒரு பகுதியில் ஒரு மசூதி கட்டப்பட்டதாகக் கூறினர்.

அயோத்தி சர்ச்சையைப் போலவே, காசி விஸ்வநாத் கோயில் தகராறும் பல வன்முறைகளை கண்டது. 1809 ஆம் ஆண்டில்,  காசியில் நடந்த இந்து-முஸ்லீம் கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர் . கல்கத்தாவின் கவுன்சில் துணைத் தலைவர், காசியின் மாஜிஸ்திரேட் ஆக இருந்த வாட்சனிடம் கலவரத்தின் பின்னணியில் இருந்த காரணத்தைக் கேட்டார். அவுரங்கசீப்பால் கோயில் இடிக்கப்பட்டதே முக்கிய காரணம் என்று வாட்சன் கூறியதாக கூறப்படுகிறது. சர்ச்சைக்கு தீர்வு காண முஸ்லிம்களை ஞான்வபியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

இருப்பினும், கல்கத்தா கவுன்சில் துணைத் தலைவர், வாட்சனின் பரிந்துரைகளை நிராகரித்தார். ஏனெனில் பிரிட்டிஷ் தரப்பு சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவர விரும்பவில்லை. இந்த உண்மை 1936 ஆம் ஆண்டில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

 இந்தியாவில் தற்போது 30 லட்சத்திற்கும் அதிகமான கோவில்கள் உள்ளன. சிறிய, பெரிய, புதிய மற்றும் பழங்கால கோயில்கள் இதில் அடங்கும், இவற்றில் 10,000 க்கும் மேற்பட்ட பழங்கால கோவில்கள் சேதமடைந்தன. இவற்றில் சில முற்றிலுமாக அழிக்கப்பட்டன மேலும் அவற்றின் மீது மசூதிகள் கட்டப்பட்டன என 2011 எடுத்த கணக்கெடுப்பு கூறுகிறது

Trending News