உத்தரப்பிரதேசம் : 'கணவருக்கு ஆண்மையில்லை' மாமனார் கொடுத்த தொல்லை - இளம்பெண் பரபரப்பு புகார்

Uttar Pradesh news : உத்தரப்பிரதேசம் மீரட்டில் இளம் பெண் ஒருவர் கணவர் மற்றும் மாமனார் மீது அடுத்தடுத்து கொடுத்த புகார் பதறவைக்கிறது. இருவரும் சேர்ந்து நிர்வாண வீடியோக்கள் எடுப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 11, 2024, 07:44 PM IST
  • உத்தரப்பிரதேசத்தில் இளம் பெண்ணுக்கு கொடுமை
  • கணவருக்கு ஆண்மையில்லை குற்றச்சாட்டு
  • மாமனார் குளிக்கும்போது வீடியோ எடுப்பதாக புகார்
உத்தரப்பிரதேசம் : 'கணவருக்கு ஆண்மையில்லை' மாமனார் கொடுத்த தொல்லை - இளம்பெண் பரபரப்பு புகார் title=

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் ஒரு விசித்திரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாமனார் மற்றும் கணவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். கணவரும், மாமனாரும் சேர்ந்து குளிக்கும்போது தன்னை நிர்வாணமாக வீடியோ எடுத்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். இதுமட்டுமின்றி, அந்த பெண் தனது கணவருக்கு ஆண்மைக்குறைவு இருப்பது பரிசோதனையில் தெரியவந்ததாகவும், இதுபற்றி மாமியார்களிடம் தெரிவித்ததும், அனைவரும் தன்னை அடிக்க ஆரம்பித்தனர் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க | 'நீட் வினாத்தாள் லீக் ஆகவில்லை...' மத்திய அரசு திடீர் பல்டி? உச்ச நீதிமன்றத்தில் NTA சொன்னது என்ன?

அத்துடன் மேலும் பல குற்றச்சாட்டுகளையும் அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார். கணவரும், மாமனாரும் சேர்ந்து தனது நிர்வாண வீடியோக்களை எடுப்பதாகவும், குளிக்கும் போது ஒளிந்திருந்து பார்கின்றனர் என்றும் கூறியுள்ளார். இதுதவிர வரதட்சணை கேட்கின்றனர் என கூறியதுடன், அந்த நிர்வாண வீடியோவை வெளியிட்டுவிடுவதாக மிரட்டியுள்ளனர் என அப்பெண் காவல்துறையிடம் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளார். கை, கால்களை கட்டி கணவர் கட்டையால் அடிக்கிறான் என்றும் அந்த பெண் கூறியுள்ளார். 

உத்தரப்பிரதேச பெண் பரபரப்பு புகார்

புகார் அளித்த பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அந்த பெண்ணின் கணவர் பெயர் மோஹித். அவர் தனியார் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார் என அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார். புகாருக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "எனக்கும் கணவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு குழந்தையில்லை. உடனே, எனக்கு பிரச்சனை இருப்பதாக எல்லோருக்கும் திட்ட ஆரம்பித்தனர். மருத்துவ பரிசோதனையில் கணவருக்கு பிரச்சனை இருப்பது தெரிந்தது. அதனை நான் வெளியில் சொல்லக்கூடாது என்பதற்கான பொய்யான காரணங்களை எல்லாம் கூறி தினமும் அடிக்க ஆரம்பித்தனர். வீட்டில் இருந்து கணவருடன் பிழைக்க வேண்டும் என்றால் வரதட்சணை கொடுக்க வேண்டும் என மிரட்டப்பட்டேன்.

குளிக்கும்போது வீடியோ எடுப்பதாக கண்ணீர்

தொடர்ந்து மாமனார் நான் குளிக்கும்போதெல்லாம் வீடியோ எடுக்கிறார். என்னுடைய கணவரும் இதற்கு உடந்தை என தெரிந்து அதிர்ச்சியடைந்தேன்." என கூறியுள்ளார். இதுகுறித்து சிட்டி எஸ்பி ஆயுஷ் விக்ரம் சிங் கூறும்போது, பெண்ணின் புகாரின் பேரில், கணவர் மற்றும் மாமனார் மீது வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | பெண்ணாக இருந்து ஆணாக மாறிய அரசு அதிகாரி! ஒப்புதல் அளித்த மத்திய அரசு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News