மீண்டும் ராசி மாறுகிறார் சனி பகவான்: இந்த ராசிகளுக்கு பெரிய நிவாரணம்

Saturn Transit 2022: ஜூலை 12ம் தேதி சனி மீண்டும் மகர ராசிக்குள் நுழைகிறார். இந்த வருடத்தில் சனி இரண்டாவது முறையாகப் பெயர்ச்சியாகிறார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 19, 2022, 06:06 PM IST
  • 2022-ம் ஆண்டு சனியின் ராசி மாற்றம்.
  • சில ராசிகளுக்கு பெரிய நிவாரணம் கிடைக்கும்.
  • அந்த அதிர்ஷ்டக்கார ராசிகள் எவை?
மீண்டும் ராசி மாறுகிறார் சனி பகவான்: இந்த ராசிகளுக்கு பெரிய நிவாரணம் title=

சனி ராசி பரிவர்தனை 2022: ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களின் ராசி மாற்றமும் அனைத்து ராசிகளிலும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஜூலை 12ம் தேதி சனி பகவான் மீண்டும் ராசியை மாற்றப் போகிறார். 

இந்த முறை சில ராசிக்காரர்கள் இந்த சனி மாற்றத்தால் பெரும் நிவாரணம் பெறப் போகிறார்கள். சனியின் ராசி மாறியவுடனேயே சிலருக்கு ஏழரை நாட்டு சனியும், சிலருக்கு சனிதசையும் தொடங்கவுள்ளது. சில ராசிக்காரர்கள் இவற்றிலிருந்து விடுபடுகிறார்கள். 

ஜூலை 12ம் தேதி சனி மீண்டும் மகர ராசிக்குள் நுழைகிறார். இந்த வருடத்தில் சனி இரண்டாவது முறையாகப் பெயர்ச்சியாகிறார். கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகளில் சனிப்பெயர்ச்சியின் தாக்கம் எப்படி இருக்கும் என்று இந்த பதிவில் காணலாம். 

2022-ம் ஆண்டு சனியின் ராசி மாற்றம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி இந்த வருடத்தில் சனி இரண்டு முறை ராசி மாறுகிறார். ஏப்ரல் 29ம் தேதி சனிபகவான் ராசி மாறினார். மீண்டும், ஜூலை 12 ஆம் தேதி சனி பகவான் தனது ராசியை மாற்றுகிறார். ஏப்ரல் 29ம் தேதி மகர ராசிக்கு பிரவேசித்த சனி பகவான், தற்போது மீண்டும் ஜூலை 12ம் தேதி மகர ராசிக்கு பிரவேசிக்க உள்ளார். இங்கு சனி பகவான் ஜனவரி 17, 2023 வரை இருப்பார். 

இந்த ராசிகளுக்கு நிவாரணம் கிடைக்கும்
சனி பகவான் மகர ராசிக்குள் நுழைவதால், கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும். ஜனவரி 17, 2023 வரை இந்த ராசியில் சனி பகவான் இருக்கப் போகிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் மூன்று ராசிக்காரர்களும் சனி தசையிலிருந்து விடுதலை பெறுவார்கள்.

மேலும் படிக்க | திருமண தடைகள் நீங்கி, விரைவில் நாதஸ்வரம் ஒலிக்க சில எளிய பரிகாரங்கள் 

சனி தசையிலிருந்து விடுதலை பெறுவீர்கள்

ஏப்ரல் 29, 2022 அன்று, சனி கும்பத்தில் நுழைந்தவுடன், கடகம், விருச்சிகம் ஆகிய ராசிகள் சனி தசையின் பிடியில் வந்தனர். ஆனால் மீண்டும் சனி பெயர்ந்தவுடன் இந்த இரு ராசிக்காரர்களும் சனி தசையிலிருந்து விடுபடுவார்கள். ஜனவரி 17, 2023 வரை, இந்த இரண்டு ராசிக்காரர்களும் சனி தசையிலிருந்து விடுபட்டிருப்பார்கள். எனினும், ஜனவரி 17 க்குப் பிறகு, மீண்டும் சனி தசை இவர்களுக்குத் தொடங்கும். 

மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியிலிருந்து விடுதலை கிடைக்கும்

ஜூலை 12-ம் தேதி நடக்கவுள்ள சனிப்பெயர்ச்சி மீன ராசியினருக்கு ஏழரை நாட்டு சனியிலிருந்து நிவாரணம் அளிக்கும். மீன ராசிக்காரர்கள் ஜனவரி 17, 2023 வரை இதிலிருந்து விடுபடுவார்கள். எனினும், ஜனவரி 17க்குப் பிறகு மீன ராசிக்காரர்கள் மீண்டும் இதில் சிக்குவார்கள்.

நாம் அவரை வணங்கி, நல்ல காரியங்களை செய்து, ஏழை எளியவர்களுக்கு உதவி வந்தால், சனியின் எந்த தசையும் தோஷமும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஆயுளை நிர்ணயிக்கும் சனீஸ்வரர்: எந்த பாவகத்தில் சனி இருந்தால் தீர்க்காயுசு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News