Indian Railways: இவ்வளவு லக்கேஜுக்கு தான் அனுமதி.. பயணிகளுக்கு முக்கிய அப்டேட்

Indian Railways: ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த பதிவில், இந்த விதிகளில் சிலவற்றை பற்றி தெரிந்துகொள்வோம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 10, 2023, 02:19 PM IST
  • இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை டிக்கெட் செக் செய்யப்படாது.
  • பிளாட்பாரம் டிக்கெட் வாங்கி ரயிலில் ஏறலாம்
  • இவ்வளவுதான் சாமான்தான் எடுத்துச் செல்ல முடியும்.
Indian Railways: இவ்வளவு லக்கேஜுக்கு தான் அனுமதி.. பயணிகளுக்கு முக்கிய அப்டேட் title=

இந்தியன் ரயில்வே: ரயில் பயணிகளுக்கு ஒரு முக்கிய அப்டேட் உள்ளது. ரயிலில் பயணம் செய்வது மக்களுக்கு எப்போதும் பிடித்தமான விருப்பமாக இருந்து வருகிறது. ரயில் பயணம் பாதுகாப்பானது. மேலும் இது வசதியான பயணமாகவும் கருதப்படுகின்றது. அதே நேரத்தில், ரயிலில் பயணம் செய்வது அனைவருக்கும் மலிவானதாகவும் இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், இன்றும் நாட்டின் பெரும்பகுதி மக்கள் ரயிலை மட்டுமே பயன்படுத்துகின்றனர். அடிக்கடி ரயிலில் பயணிக்கும் நபரில் நீங்களும் ஒருவரா? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியான இருக்கும். 

ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த பதிவில், இந்த விதிகளில் சிலவற்றை பற்றி தெரிந்துகொள்வோம். இவற்றை நாம் தெரிந்துகொள்வதால் நமது ரயில் பயணம் மிகவும் வசதியாகவும் அழகாக மாறும்.

ரயில்வேயின் இந்த விதிகளில் ஒன்றின் படி, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தூங்குவதற்கு நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு, நடுவில் இருக்கும் மிடில் பர்த்களை கீழே இறக்க வேண்டும். இவை இறக்கப்பட்டால் மீதமுள்ள பயணிகள் அமர்ந்து வசதியாக பயணம் செய்ய முடியும். அதே போல் இரவில் பயணம் செய்யும் போது பயணிகள் அதிக சத்தமாக இசையைக் கேட்பதும், சத்தமாகப் பேசுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை டிக்கெட் செக் செய்யப்படாது

இந்தியன் ரயில்வே நீண்ட தூரம் பயணிக்கும் பல ரயில்களை இயக்குகின்றது. இந்த ரயில்களில் பயணிகள் சில சமயம் ஒரு இரவையும், சில சமயங்களில் இரு இரவு வேளகளை கூட கழிகக் வேண்டிய நிலை உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், பயணிகள் இரவில் தூங்கும்போது, ​​​​டிடிஇ அவர்களின் டிக்கெட்டுகளை சரிபார்க்க வரும்போது மிகப்பெரிய சிக்கல் ஏற்படுகிறது. ஆனால் ரயில்வே விதிகளின்படி, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை டிக்கெட்டுகளைச் சரிபார்க்க டிடிஇ பயணிகளை எழுப்ப முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இரவு 10 மணிக்கு பிறகு பயணம் தொடங்குபவர்களுக்கு இந்த விதி பொருந்தாது.

மேலும் படிக்க | ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி செய்தி! நாளை முதல் ரயில்களில் மிகப்பெரும் மாற்றம்

பிளாட்பாரம் டிக்கெட் வாங்கி ரயிலில் ஏறலாம்

மறுபுறம், ரயில்வே விதியின்படி, டிக்கெட் வாங்க நேரமில்லை என்றால், பிளாட்பார்ம் டிக்கெட்டை மட்டும் வாங்கிக்கொண்டும் ரயிலில் ஏறலாம். இதற்குப் பிறகு, உங்கள் போர்டிங் ஸ்டேஷனிலிருந்து சேருமிடம் வரை, நீங்கள் ரயில் டிக்கெட்டுக்கு பணம் செலுத்தி டிடிஇ இடம் டிக்கெட் வாங்க வேண்டும். பல சமயங்களில் பயணிகள் எங்காவது செல்ல வேண்டி இருக்கும். அவர்கள் ரயிலுக்கான டிக்கெட்டை எடுப்பதற்குள் ரயில் சென்று விடலாம். ஆகையால், பயணிகளுக்காக இந்திய ரயில்வே இந்த வசதியை செய்துள்ளது. 

இவ்வளவுதான் சாமான்தான்  எடுத்துச் செல்ல முடியும்

ரயில்வே விதிகளின்படி, பயணிகள் ரயில் (பேசஞ்சர் ட்ரெயின்) பயணத்தின் போது, ​​பயணிகள் 40 முதல் 70 கிலோ வரையிலான லக்கேஜ்களை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். இதை விட அதிகமான லக்கேஜுடன் யாராவது பயணம் செய்தால், அவர் அதற்கான தனி கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்திய ரயில்வேயின் இன்னும் சில விதிகளின் விவரங்கள்

ரயிலில் மதுபானம் கொண்டு செல்ல முடியுமா?

ரயிலில் மதுபானங்களை எடுத்துச் செல்வது நீங்கள் பயணிக்கும் மாநிலத்தைப் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அனைத்து மாநிலங்களுக்கும் மதுபானம் தொடர்பாக அவற்றின் சொந்த விதிகள் உள்ளன. அரசியல் சட்டத்தில், மதுபானம் தொடர்பான விதிகளை அந்தந்த மாநிலங்கள் தங்கள் சொந்த விதிகளுக்கு ஏற்ப உருவாக்கலாம் என்ற விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்

மது அருந்திவிட்டு ரயிலில் பயணம் செய்தாலோ, அல்லது மதுபானங்களை எடுத்துச்சென்றாலோ, அப்படி செய்பவர்கள் மீது இந்திய ரயில்வே சட்டம் 1989 பிரிவு 165ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர, ரயிலில் தடை செய்யப்பட்ட வேறு ஏதேனும் பொருட்களை யாரேனும் வைத்திருந்தால், அவர்களுக்கு 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மறுபுறம், இந்த பொருளால் ஏதேனும் இழப்பு ஏற்பட்டால், அந்த நபர் அதையும் ஈடுசெய்ய வேண்டும்.

மேலும் படிக்க | ரயில் பயணிகளின் கவனத்திற்கு!! ஜூன் 10 முதல் ரயில்களில் பெரும் மாற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News