Indian Railways: இனி இவங்களுக்குதான் லோயர் பர்த்.. பயணிகளுக்கு முக்கிய அப்டேட்!!

Indian Railways: பெரும்பாலான மக்கள் விரும்பும் இருக்கை லோயர் பெர்த் அல்லது சைட் லோயர் பெர்த் ஆக உள்ளது. ஆனால் இப்போது இந்த இருக்கையை பதிவு செய்ய முடியாமல் போகலாம்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 27, 2023, 05:24 PM IST
  • மாற்றுத்திறனாளிகள் அல்லது உடல் ஊனமுற்றவர்களுக்காக இரயிலின் கீழ் பெர்த்தை ரயில்வே ஒதுக்கியுள்ளது.
  • அவர்களின் பயணத்தை மேலும் வசதியாக மாற்ற, இந்திய ரயில்வே இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.
  • இருக்கை விநியோகம் எப்படி இருக்கும்?
Indian Railways: இனி இவங்களுக்குதான் லோயர் பர்த்.. பயணிகளுக்கு முக்கிய அப்டேட்!! title=

இந்திய ரயில்வே: ரயில் பயணிகளுக்கு ஒரு முக்கிய செய்தி. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தங்களுக்குப் பிடித்த இருக்கையைப் பெற, ஒரு மாதத்திற்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யத் தொடங்குகிறார்கள். பெரும்பாலான மக்கள் விரும்பும் இருக்கை லோயர் பெர்த் அல்லது சைட் லோயர் பெர்த் ஆக உள்ளது. ஆனால் இப்போது இந்த இருக்கைகளை விரும்பும் பயணிகள் இந்த இருக்கையை பதிவு செய்ய முடியாமல் போகலாம். ஆம், இதற்கான உத்தரவை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. 

இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள உத்தரவின்படி, ரயிலின் கீழ் பெர்த் சில வகை மக்களுக்கு ஒதுக்கப்படும். ரயில் பெட்டிகளின் கீழ் இருக்கை (லோயர் பர்த்) யாருக்கு கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மாற்றுத்திறனாளிகள் அல்லது உடல் ஊனமுற்றவர்களுக்காக இரயிலின் கீழ் பெர்த்தை ரயில்வே ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் பயணத்தை மேலும் வசதியாக மாற்ற, இந்திய ரயில்வே இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.

இருக்கை விநியோகம் எப்படி இருக்கும்

ரயில்வே வாரியத்தின் உத்தரவின்படி, ஸ்லீப்பர் வகுப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு இருக்கைகள், ( 2 கீழ் அதாவது லோயர் மற்றும் 2 மிடில்) மூன்றாவது ஏசியில் இரண்டு இருக்கைகள், ஏசி3 எகானமியில் இரண்டு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இருக்கைகளில் மாற்றுத்திறனாளிகள் / உடல் ஊனமுற்றவர்கள் அல்லது அவருடன் பயணம் செய்பவர்களும் அமரலாம்.

மேலும் படிக்க | ஏஜெண்டே வேண்டாம்.. 2 நிமிடங்களில் கன்ஃபர்ம் ரயில் டிக்கெட் புக் செய்யலாம்: இதோ முழு செயல்முறை

அதே நேரத்தில், கரிப் ரத் ரயிலில் 2 கீழ் இருக்கைகளும், 2 மேல் இருக்கைகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இருக்கைகளுக்கு அவர்கள் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.

ரயில்வே மூத்த குடிமகனுக்கு அதற்கான தேர்வை செய்யாமலேயே சீட் கொடுக்கும்

இவை தவிர, மூத்த குடிமக்களுக்கு அதாவது பெரியவர்களுக்கு அவர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கமாலேயே இந்திய ரயில்வே லோயர் பெர்த் தருகிறது. ஸ்லீப்பர் வகுப்பில் 6 முதல் 7 கீழ் பெர்த்கள், அனைத்து மூன்றாவது ஏசி கோச்களிலும் 4 முதல் 5 கீழ் பெர்த்கள், ஒவ்வொரு இரண்டாவது ஏசி பெட்டியிலும் 3 முதல் 4 லோயர் பெர்த்கள் 45 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு ரயிலில் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தவிர கர்ப்பிணிப் பெண்களுக்கும் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இதற்கான ஆப்ஷனை (விருப்பத்தை) தேர்ந்தெடுக்காமலேயே இந்த இருக்கைகள் அவர்களுக்கு கிடைக்கும். 

மறுபுறம், மூத்த குடிமகன், மாற்றுத்திறனாளிகள் / உடல் ஊனமுற்றவர்கள் அல்லது கர்ப்பிணிப் பெண்ணுக்கு மேல் இருக்கையில் டிக்கெட் முன்பதிவு கொடுக்கப்பட்டால், ஆன்போர்டு டிக்கெட் சோதனையின் போது டிடி அவர்களுக்கு கீழ் இருக்கை வழங்குவதற்கான ஏற்பாடும் உள்ளது.

இந்திய ரயில்வேயின் இன்னும் சில விதிகளின் விவரங்கள்

ரயிலில் மதுபானம் கொண்டு செல்ல முடியுமா?

ரயிலில் மதுபானங்களை எடுத்துச் செல்வது நீங்கள் பயணிக்கும் மாநிலத்தைப் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அனைத்து மாநிலங்களுக்கும் மதுபானம் தொடர்பாக அவற்றின் சொந்த விதிகள் உள்ளன. அரசியல் சட்டத்தில், மதுபானம் தொடர்பான விதிகளை அந்தந்த மாநிலங்கள் தங்கள் சொந்த விதிகளுக்கு ஏற்ப உருவாக்கலாம் என்ற விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்

மது அருந்திவிட்டு ரயிலில் பயணம் செய்தாலோ, அல்லது மதுபானங்களை எடுத்துச்சென்றாலோ, அப்படி செய்பவர்கள் மீது இந்திய ரயில்வே சட்டம் 1989 பிரிவு 165ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர, ரயிலில் தடை செய்யப்பட்ட வேறு ஏதேனும் பொருட்களை யாரேனும் வைத்திருந்தால், அவர்களுக்கு 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மறுபுறம், இந்த பொருளால் ஏதேனும் இழப்பு ஏற்பட்டால், அந்த நபர் அதையும் ஈடுசெய்ய வேண்டும்.

இரவில் போனை சார்ஜ் செய்ய முடியாது

இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ரயிலில் பயணிகள் தங்கள் ஸ்மார்ட்போன் அல்லது மடிக்கணினிகளை சார்ஜ் செய்ய இந்திய ரயில்வே தடை விதித்துள்ளது. ரயிலில் எந்த வித விபத்தும் ஏற்படாமல் இருக்க இந்திய ரயில்வே இப்படி செய்கிறது. மக்கள் பெரும்பாலும் தங்கள் தொலைபேசியை சார்ஜிங்கில் போட்டுவிட்டு அது முழுமையாக சார்ஜ் ஆனவுடன் சார்ஜை அணைக்க மறந்துவிடுகிறார்கள். சார்ஜிங்கில் போட்டுவிட்டு பயணிகள் தூங்கி விடுவதால், சார்ஜை மூட அவர்களுக்கு பல சமயம் நினைவிருப்பதில்லை. 

மேலும் படிக்க | ராஜ்தானி-சதாப்தியில் பயணம் செய்பவர்களுக்கு ஜாக்பாட், புதிய அறிவிப்பு வெளியீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News