செவ்வாயின் மாற்றத்தால் இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும், செல்வம் பெருகும்

Astrology: தங்கள் ஜாதகத்தில் செவ்வாய் சுப நிலையில் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இந்த காலம் இந்த ராசிக்காரர்களுக்கு அமோகமாக இருக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 16, 2022, 04:25 PM IST
  • பிப்ரவரி 26 அன்று செவ்வாய் கிரகம் அதன் உச்ச ராசியான மகர ராசியில் நுழைகிறது.
  • மிதுன ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் விவாதங்களில் ஈடுபடுவதை மட்டும் தவிர்க்க வேண்டும்.
  • தனுசு ராசிக்கார்ரகளுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
செவ்வாயின் மாற்றத்தால் இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும், செல்வம் பெருகும் title=

செவ்வாய் ராசி பரிவர்த்தனை 2022: பிப்ரவரி 26 அன்று செவ்வாய் கிரகம் அதன் உச்ச ராசியான மகர ராசியில் நுழைகிறது. இங்கு ஏற்கனவே சனி பகவான் இருக்கிறார். இந்த ராசியில் செவ்வாய் வலுவான நிலையில் இருப்பார். 

செவ்வாயின் இந்த நிலை அனைத்து 12 ராசிகளிலும் அதிசயமான விளைகளை ஏற்படுத்தும். இந்த நிலையில் செவ்வாய் சனியுடன் இணைந்திருக்கும். தங்கள் ஜாதகத்தில் செவ்வாய் சுப நிலையில் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இந்த காலம் இந்த ராசிக்காரர்களுக்கு அமோகமாக இருக்கும். அந்த ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம்: நிதி ரீதியாக இந்த நேரம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பணியிடத்தில் அங்கீகாரமும் மரியாதையும் பெறுவீர்கள். ஒவ்வொரு சவாலையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். பயணங்களால் நல்ல முன்னேற்றமும் பண வரவும் கிடைக்கும். 

மேலும் படிக்க | சனி, குரு உட்பட இந்த கிரகங்களின் நிலைகளில் மாற்றம்: யாருக்கு ஆபத்து? யாருக்கு ஆதாயம்? 

மிதுனம்: செவ்வாயின் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு நிதி விஷயத்தில் அதிக லாபங்களை அளிக்கும். திடீரென்று எதிர்பாராத இடத்திலிருந்து பண வரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் செயல்திறன் சிறப்பாக இருக்கும். மிதுன ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் விவாதங்களில் ஈடுபடுவதை மட்டும் தவிர்க்க வேண்டும். இது உங்களுக்கு சாதகமான நேரம். இந்த கலாத்தில் பெரிய சாதனைகளை செய்யலாம். 

கன்னி: பணியிடத்தில் மேலதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் இந்த காலத்தில் அதிகம் உள்ளன. இந்த நேரம் வியாபாரிகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த காலத்தில் கன்னி ராசிக்காரர்கள் விரும்பிய பலன்களை அடைய முடியும். முதலீடு செய்வதற்கு மிகவும் சாதகமாக நேரமாக இது இருக்கும். இந்த நேரத்தில் ஆபத்தான பணிகளை மட்டும் தவிர்க்கவும்.

தனுசு: இந்தக் காலகட்டத்தில் உங்களுக்கு நிதிப் பலன்கள் அதிகமாக கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கும் இந்த சூழல் சாதகமாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பணம், புகழ், மகிழ்ச்சி, நிம்மதி என அனைத்தும் அடைக்கலம் புகும் நபர்கள் இந்த ராசிக்காரர்கள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News