'மாட்டு சாணம் அனைவரையும் பாதுகாக்கும்' என ராஷ்டிரிய காம்தேனு ஆயோக் தலைவர் தகவல்!!

கதிர்வீச்சு எதிர்ப்பு என்பதால் மாட்டு சாணம் தீங்கு விளைவிக்கும் நோய்களிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் என்று ராஷ்டிரிய காம்தேனு ஆயோக் தலைவர் தெரிவித்துள்ளார்..!

Last Updated : Oct 13, 2020, 02:49 PM IST
'மாட்டு சாணம் அனைவரையும் பாதுகாக்கும்' என ராஷ்டிரிய காம்தேனு ஆயோக் தலைவர் தகவல்!! title=

கதிர்வீச்சு எதிர்ப்பு என்பதால் மாட்டு சாணம் தீங்கு விளைவிக்கும் நோய்களிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் என்று ராஷ்டிரிய காம்தேனு ஆயோக் (RKA) தலைவர் வல்லபாய் கதிரியா தெரிவித்துள்ளார். ராஷ்ட்ரிய காம்தேனு ஆயோக் தலைவர் மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட `சிப்' ஒன்றை வெளியிட்டார். இது கைபேசிகளிலிருந்து வரும் கதிர்வீச்சைக் குறைக்கிறது என்றும் இது நோய்களுக்கு எதிரான பாதுகாப்பாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

பசு மாட்டு சாணம் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் நாடு தழுவிய பிரச்சாரமான `காம்தேனு தீபாவளி அபியான்' தொடங்கப்பட்டபோது பேசிய வல்லபாய் கதிரியா இந்த கருத்துக்களை தெரிவித்தார். "மாட்டு சாணம் அனைவரையும் பாதுகாக்கும், இது கதிர்வீச்சு எதிர்ப்பு ... இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது ... இது கதிர்வீச்சு சில்லு ஆகும், இது கதிர்வீச்சைக் குறைக்க மொபைல் போன்களில் பயன்படுத்தப்படலாம். இது நோய்களிலிருந்து பாதுகாக்கப்படும்" என்று அவர் கூறினார்.

கௌசத்வா கவாச் (Gausatva Kavach) என்று பெயரிடப்பட்ட இந்த `சிப்`, ராஜ்கோட்டைச் சேர்ந்த ஸ்ரீஜி கௌசலா (Shrijee Gaushala) என்பவரால் தயாரிக்கப்படுகிறது.

ALSO READ | Aarogya Sethu App, COVID காலத்தில் சுகாதார அமைப்புகளுக்கு பெரும் உதவியாக இருந்துள்ளது: WHO புகழாரம்

2019 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட RKA பசுக்களின் பேணுதல், பாதுகாப்பு மற்றும் மேம்பாடு மற்றும் அவற்றின் சந்ததியினரை நோக்கமாகக் கொண்டது. மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் ஆயோக், பண்டிகைகளின் போது மாட்டு சாணம் சார்ந்த பொருட்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் நாடு தழுவிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

இந்த தீபாவளியை சீனாவில் தயாரிக்கப்பட்ட ‘தியாஸ்’ பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு கதிரியா மேலும் மக்கள் வேண்டுகோள் விடுத்தார், ஆர்.கே.ஏ தொடங்கிய பிரச்சாரம் பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா’ கருத்து மற்றும் `சுதேசி இயக்கம்’ ஆகியவற்றை அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

Trending News