சுதந்திர தினம்: மெட்ரோவில் பயணம் செய்பவர்களுக்கு இது ஒரு முக்கியமான செய்தி

டெல்லி மெட்ரோவில் பயணம் செய்பவர்களுக்கு இது ஒரு முக்கியமான செய்தி. சுதந்திர தினத்தன்று டெல்லி மெட்ரோ செயல்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 13, 2019, 04:10 PM IST
சுதந்திர தினம்: மெட்ரோவில் பயணம் செய்பவர்களுக்கு இது ஒரு முக்கியமான செய்தி title=

புதுடெல்லி: டெல்லி மெட்ரோவில் பயணம் செய்பவர்களுக்கு இது ஒரு முக்கியமான செய்தி. சுதந்திர தினத்தன்று டெல்லி மெட்ரோ செயல்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது. இருப்பினும், நான்கு மெட்ரோ நிலையங்களில் நுழைவு மற்றும் வெளியேறுதல் ஓரளவு மூடப்படும். பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, லால்கிலா, ஜமா மஸ்ஜித், டெல்லி கேட் மற்றும் ஐ.டி.ஓ போன்ற நிலையங்களில் உள்ள சில வாயில்கள் மூடப்படும். 

சுதந்திர தினத்தன்று பயணிகளுக்கு எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படாத வகையில் கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள் லால்கிலா மற்றும் ஜமா மஸ்ஜித் நிலையத்தில் திறக்கப்படும். மேலும், இந்த நிலையங்களில் மற்ற நிலையங்களில் இருந்தும் சில மெட்ரோ ஊழியர்கள் இங்கு அனுப்பப்படுவார்கள். இங்கு வரும் அவர்கள் பயணிகளுக்கு உதவியாக செயல்படுவார்கள்.

நமக்கு கிடைத்த தகவலின் படி, ஆகஸ்ட் 15 ஆம் தேதி மெட்ரோ சேவையில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால் ஆகஸ்ட் 14 மாலை 6 மணிக்குப் பிறகுதான் மெட்ரோ பார்க்கிங் மூடப்படும். இது அடுத்த நாள் ஆகஸ்ட் 15 மதியம் 2 மணி வரை இருக்கும். அதன் பிறகு மீண்டும் பார்க்கிங் செயல்பாட்டுக்கு வரும். நிறுத்தலாம்.

Trending News