நீதி கடவுளான சனியின் அருளால் அடுத்த ஆறு மாதங்கள் இந்த ‘3’ ராசிக்களுக்கு ஜாக்பாட் தான்

Saturn Transit 2022: நீதிக் கடவுளான சனி பகவானின் நிலை மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும் சில குறிப்பிட்ட ராசிகளுக்கு அதிர்ஷ்ட தேவதையின் ஆதரவு முழுமையாக இருக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 20, 2022, 11:01 AM IST
  • குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும்.
  • நீண்ட காலமாக தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும்.
  • சனி தேவன் வேலை மற்றும் வியாபாரம் இரண்டிலும் வெற்றியை அள்ளித் தருகிறார்.
நீதி கடவுளான சனியின் அருளால் அடுத்த ஆறு மாதங்கள் இந்த ‘3’ ராசிக்களுக்கு ஜாக்பாட் தான் title=

நீதிக் கடவுளான  சனி பகவான் கும்ப ராசியில் இருக்கிறார். சனி பகவான் ஜூலை 12, 2022 அன்று, சனி மகர ராசிக்கு பெயர்ச்சியான நிலையில், ஜூலை 2023 வரை சனி இந்த ராசியில் இருப்பார். இதற்குப் பிறகு அவர் தனது மூல ராசியான கும்பத்தில் நுழைவார். இதனால் அடுத்த ஆறு மாதங்களுக்கு சில குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்களுக்கும் சனிபகவான் மிகவும் கருணை காட்டுவார் என்கின்றனர் ஜோதிடர்கள். இந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சனி பகவானின் நிலை மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் பல விதமான தாக்கங்களையும்  மாற்றங்களையும் ஏற்படுத்தும்.  எனினும் இதனால், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு சமூக, பொருளாதாரம், குடும்ப வாழ்க்கை போன்ற அனைத்திலும், சனி பகவானின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்கும். 

ரிஷபம்:

மகர ராசியில் சனிப்பெயர்ச்சி காரணமாக ரிஷபம் ராசிக்காரர்கள் பெரும் பலன் பெற முடியும். இந்த நேரத்தில் அதிர்ஷ்ட தேவதையின் முழு ஆதரவு அவர்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளை நிறைவேறி நிம்மதி கிடைக்கும். திடீர் பண ஆதாயம் ஏற்படும். உத்தியோகத்தில் சிறப்பாகச் செயல்படுவார்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகளும் கிடைக்கலாம்.வெளியூர் பயணம் செல்லலாம். இந்த பயணங்கள் உங்களுக்கு அனுகூலமான பலன்களை அளிக்கும். தொழிலில் ஆதாயம் உண்டாகும்.

மேலும் படிக்க | Astro: ஜாதகத்தில் சனி தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

சிம்மம்- சிம்ம ராசிக்காரர்களுக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு சனிபகவான் அருள்புரிவார். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவார்கள். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். நீண்ட காலமாக தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும். சனி பகவான்  வேலை மற்றும் வியாபாரம் இரண்டிலும் வெற்றியை அள்ளித் தருகிறார்.

மேலும் படிக்க | சௌபாக்கியத்தை அருளும் ‘சுக்ரன்’ கிரகம் வலுவாக இருக்க சில பரிகாரங்கள் 

மகரம்:

மகர ராசியை ஆளும் கிரகம் சனி தேவன். மகர ராசியில் சனிபகவான் இருப்பதால், இந்த ராசியை சேர்ந்தவர்கள் சிறந்த பலன் அடைவார்கள். இந்த நேரத்தில், திடீர் பண ஆதாயத்திற்கான வாய்ப்பைப் பெறுவீர்கள். தொழிலில் பதவி உயர்வு பெறலாம். எந்தவொரு புதிய வேலையையும் தொடங்க இந்த நேரம் சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கான முழு பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும். 

மேலும் படிக்க | ரிஷப ராசிக்குள் நுழையும் சுக்ரன்; பண மழையில் நனையப் போகும் 3 ராசிக்காரர்கள்

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News