Palmistry: இந்த நபர்கள் யாரையும் மயக்கக்கூடியவர்கள், உங்க கையில் இந்த ரேகை இருக்கா?

மனிதர்களின் குறைகள் மற்றும் குறைபாடுகள் அவர்களது ராசியைப் பொறுத்தது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 12, 2021, 03:40 PM IST
  • ஒவ்வொரு நபரும் தான் பிறக்கும்போது, தனது அதிர்ஷ்டத்தை தன்னுடன் சுமந்த வண்ணம் பிறக்கிறார்.
  • ஜோதிடத்தில் 12 ராசிக்காரர்களின் குணாதிசயங்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளன.
  • ஹஸ்த்ரேகா சாஸ்திரத்தின் மூலம் (கைரேகை ஜோதிடம்) ஒருவரைப் பற்றி பல விஷயங்களை அறிய முடியும்.
Palmistry: இந்த நபர்கள் யாரையும் மயக்கக்கூடியவர்கள், உங்க கையில் இந்த ரேகை இருக்கா? title=

Palmistry:  ஒவ்வொரு நபரும் தான் பிறக்கும்போது, தனது அதிர்ஷ்டத்தை தன்னுடன் சுமந்த வண்ணம் பிறக்கிறார். ஆனால் அவரது குணங்களும் அவரது வெற்றி மற்றும் தோல்வியில் பெரும் பங்கு வகிக்கின்றன. 

இருப்பினும், இந்த குணங்கள் மற்றும் குறைபாடுகள் அவரது ராசியைப் பொறுத்து அமைகின்றன. ஜோதிடத்தில் 12 ராசிக்காரர்களின் குணாதிசயங்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளன. அதே போல ஹஸ்த்ரேகா சாஸ்திரத்தின் மூலம் (கைரேகை ஜோதிடம்) ஒருவரைப் பற்றி பல விஷயங்களை அறிய முடியும். 

ஒரு நபரின் கையில் உள்ள ரேகைகளிலிருந்து, அவரது இயல்பு, நடத்தை, எதிர்காலம் போன்ற பல விஷயங்களைப் பற்றி எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும். கைரேகை ஜோதிடம் (Palmistry) மூலம், எந்த நபர்கள் மிகவும் கவர்ச்சிகரமான பண்புகளைக் கொண்டவர்கள், மற்றவர்களை ஈர்க்கும் ஆளுமைக்கு சொந்தக்காரர்கள் என்பதை அறிய முடியும்.

கையின் இந்த ரேகைகள் வலுவான ஆளுமையை உருவாக்குகின்றன

ஒரு நபரின் உள்ளங்கையில் நடுப்பகுதி அழுத்தப்பட்டிருந்து, சூரியன்-குரு மலைக்கான பகுதி உயர்த்திருந்தால், அத்தகையவர்கள் வலுவான ஆளுமைக்கு சொந்தக்காரர்கள். அத்தகைய நபர்கள் பிறரை மிக விரைவில் அவர்கள் பக்கம் ஈர்க்கிறார்கள். பெரும்பாலும் இவர்கள் ஆதிக்க ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். 

இந்த நபர்கள் எப்போதும் பலர் புடை சூழ இருப்பார்கள். இந்த மக்கள் எப்போதும் மக்களால் சூழப்பட்டுள்ளனர். இவர்களின் பொருளாதார நிலை (Economic Condition ) சிறப்பாக இருந்தாலும், அவர்களுக்கு எப்போதாவது பணம் தேவைப்பட்டால், மக்கள் இவருக்காக பணம் கொடுக்க தயாராக இருப்பார்கள்.

ALSO READ: Palmistry: உங்கள் எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் கைரேகை 
 

சுபகர்தரி யோகம் செல்வம் நிறைந்த வாழ்க்கையை அளிக்கிறது

பாக்கிய ரேகை சனி மலை வரை சென்றால், அது சுபகர்தரி யோகம் என்று அழைக்கப்படுகிறது. கைரேகையில் சுப்கர்தாரி யோகா மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அத்தகைய யோகத்தை தங்கள் கைகளில் வைத்திருப்பவர்கள் மிகவும் பிரமிக்க வைக்கும் மற்றும் கவர்ச்சிகரமான ஆளுமைக்கு சொந்தக்காரர்கள். அவர்களின் மாயாஜால ஆளுமை காரணமாக, பிறர் அவர்களால் எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள். 

பொதுவாக இப்படிப்பட்டவர்கள் செல்வாக்கு நிறைந்தவர்களாக இருப்பார்கள். இந்த நபர்கள் அபரிமிதமான செல்வத்துடன் (Wealth) வாழ்க்கையை நடத்துகிறார்கள். பல வழிகளில் இருந்து இவர்களுக்கு பண வரவு இருக்கும். இருப்பினும், பல சமயங்களில் இவர்கள் தங்கள் பிரபலத்தால் ஆணவத்திற்கு இரையாகிறார்கள், அதன் காரணமாக பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

(குறிப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்கள் மற்றும் அனுமானங்களின் அடிப்படையில் அமைந்தவை. ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ: Vastu Shastra: சமையலறையில் இவை மட்டும் தீரவே கூடாது, தீர்ந்தால் தீராது பிரச்சனைகள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News